சிஐடியு நினைவு ஸ்தூபி அகற்றப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல், மே 19- பள்ளிபாளையத்தில் அமைக் கப்பட்டிருந்த நினைவு ஸ்தூபி அகற் றப்பட்டதைக் கண்டித்து, சிஐடியுவி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2012 ஆம் ஆண்டு பள்ளி பாளையம் விசைத்தறித் தொழிலா ளர்களின் வாழ்வுரிமை கோரிக்கை மாநாட்டில், தொழிலாளர்களின் கோரிக்கை நினைவாக காவேரி ஆர் எஸ் பேருந்து நிறுத்தம் அருகே சிஐ டியு சார்பில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உயர்நீதி மன்ற மதுரை கிளையின் உத்தர வின்படி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசியல் கட்சிக ளின் கொடிக்கம்பங்கள் அகற்றப் பட்டு வரும் நிலையில், காவேரி ஆர்.எஸ். பகுதியில் அமைக்கப்பட்டி ருந்த நினைவு ஸ்தூபியை எவ் வித அறிவிப்புமின்றி நெடுஞ் சாலைத்துறையினர் அகற்றியுள்ள னர். நினைவு சின்னத்தை அகற்ற எந்தவொரு முறையான கடிதமும் கொடுக்காமல் அகற்றிய நெடுஞ் சாலை துறையையும், மாவட்ட நிர் வாகத்தையும் கண்டித்தும், பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங் களை அகற்றுவது குறித்த உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி, காவேரி ஆர்.எஸ் பகுதியில் சிஐடியு-வினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஒன்றிய உதவிச்செயலாளர் கே. குமார் தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் எம்.அசோகன் கண்டன உரையாற்றினார். இதில், ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துக்குமார், நிர்வாகிகள் ஏ.அசன், முருகேசன், சரவணவேல் மற்றும் ஏராளமான விசைத்தறித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.