கோவில் நிலத்தை பொது ஏலம் விட எதிர்ப்பு; தர்ணா
கோவை, ஜூன் 2- கோவில் நிலத்தை பொது ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து பரம்பரை அறங்கா வலர் குடும்பத்தினர் இந்து சமய அற நிலைத்துறை இணை ஆணையர் அலு வலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், கிணத்துக் கடவு குருநெல்லிபாளையம் கிராமத் தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான விநாயகர், மாரியம்மன், சுப்பிரமணி கோவில்கள் அமைந்துள் ளது. இக்கோயில்களில் வைரவன் பண் டார குடும்பத்தார் பல ஆண்டுகளாக கோவிலில் சுமார் 25 ஏக்கரில் வரும் விளைச்சலைக் கொண்டு பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் உள்ளூ ரைச் சேர்ந்தவர்கள், அமைதி கூட்டம் என்ற பெயரில் நூற்றுக்கும் மேலான நபர்கள் கூடி பூஜை செய்து கொண்டி ருந்த பூசாரியிடம் இருந்து சாவியை பறித்துள்ளனர். தற்போது அந்த நிலத் தையும் ஏலம் விடப் போவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சட்டத்திற்கு புறம் பான நடவடிக்கை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பிரச்சனைக்கு காரணமானவர் கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.ஆர்.பழனிச்சாமி தலைமையில் ஈஸ்வரன், சுப்பிரமணி உள்ளிட்ட பரம் பரை அறங்காவலர் பூசாரிகள் குடும்பத் தினர் திங்களன்று கோவை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா வில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய வி.ஆர்.பழனிச் சாமி, கடந்த 1898 இல் இருந்து இந்த நிலம், மைசூர் மன்னரால் வழங்கப்பட்டு பூசாரிகள் பெயரில் பாத்தியம் செய்யப் பட்டுள்ளது. அனுபவிக்கும் உரிமை யும், பூசை செய்யும் உரிமையும் 1964 இல் அன்றைக்கு உள்ள தாசில்தார் ஆவ ணமாக எழுதி கொடுத்துள்ளார். இந் நிலையில், ஆதிக்க சாதியினர் அனைவ ரும் சேர்ந்து பூசாரியை வெளியேற்ற முடிவெடுத்து, எந்தவிதமான சட்ட விதி முறைகளும் இல்லாமல் இந்து சமய அற நிலையத்துறை நடந்து கொள்வதை வன்மையாக கண்டிக்கிறோம். பாதிக் கப்பட்ட குடும்பம் நிற்கதியாக சாலை யில் நின்று கொண்டிருக்கிறது. அதற்கு அறநிலையத்துறை தான் பொறுப்பு, என்றார்.