பயணியை நடுவழியில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து ஊழியர்கள்
சிபிஎம் புகார்
சிபிஎம் புகார் பொள்ளாச்சி, மே 23– பொள்ளாச்சி - பழனி வழித்தடத் தில் செல்லும் தனியார் பேருந்து பெண் பயணி ஒருவரை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்ட சம்பவத்தில் தனியார் பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் பேருந்து நிறுத்தம் சுமார் 15 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்க ளுக்குச் செல்லப் பயன்படுத்தும் ஒரு முக்கியப் போக்குவரத்து மையமாகும். அனைத்துப் பேருந்துகளும் இங்கு நின்று செல்ல வேண்டும் என அரசாணை இருந்தாலும், பெரும்பாலான தனியார் பேருந்துகள் இதை மதிப்பதில்லை. இந்நிலையில் வியாழனன்று இரவு பொள்ளாச்சியில் இருந்து கோமங்க லம் செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறிய பெண் பயணி ஒருவரை, கோமங்க லம் பேருந்து நிறுத்தம் நிற்காது எனக் கூறி வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுச் சென்றனர். இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் பேருந்தை முற்றுகையிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்திலும், பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் புகாரளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தனியார் பேருந்துகள் நிற்காதது குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடுமலையிலி ருந்தும் பொள்ளாச்சியிலிருந்தும் வரும் அனைத்து தனியார் பேருந்துகளும் கோமங்கலம்புதூரிலும் கோலார் பட்டியிலும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத் தில் மக்களைத் திரட்டி தொடர் போராட் டங்களில் ஈடுபடுவோம், என்றனர். இத னையே மனுவாகவும் அளித்தனர். முன்னதாக இந்த மனு அளிக்கும் நிகழ்வில், சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச் சாமி, திருப்பூர் மாவட்ட செயற்குழு கி.கனகராஜ், பொள்ளாச்சி தாலுகாக் குழு உறுப்பினர்கள் கே.மகாலிங்கம், வி.பாலகுருசாமி, வி.தொ.ச தாலுகா தலைவர் கே.ஏபட்டீஸ்வர மூர்த்தி, கோமங்கலம்புதூர் கிளைச் செயலா ளர் பி.செல்வகுமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.