tamilnadu

img

பஞ்சமி நிலப் பிரச்சனைகள் தனியாக விசாரிக்கப்படும்

பஞ்சமி நிலப் பிரச்சனைகள் தனியாக விசாரிக்கப்படும்

எஸ்சி,எஸ்டி நல ஆணையக் குழு தலைவர் பேட்டி

கோவை, ஜூன் 26 – தமிழ்நாடு முழுவதும் நிலுவை யில் உள்ள பஞ்சமி நிலம் தொடர் பான பிரச்சனைகள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருவதாக ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நல  ஆணையக் குழு தலைவர் ச.தமிழ் வாணன் செய்தியாளர்களிடம் தெரி வித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வியாழனன்று, எஸ்சி, எஸ்டி நல ஆணையக்குழு ஆய்வு மேற்கொண்டது. இதன் தலைவர் நீதி யரசர் ச.தமிழ்வாணன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட ஆட்சி யர் பவன்குமார், மாநகராட்சி ஆணை யர் சிவகுரு பிரபாகரன், காவல் ஆணையர் சரவணசுந்தர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினருக்கான அரசு  திட்டங்கள் மாவட்டத்தில் எந்த அள விற்கு முழுமையாகச் செயல்படுத் தப்பட்டுள்ளன என்பது குறித்து அதி காரிகளிடம் ஆணையத் தலைவர் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களும், அமைப்பினரும் தங்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக் களைச் சமர்ப்பித்தனர். இதுகுறித்து, ஆணையக் குழு  தலைவர் ச.தமிழ்வாணன் பேசுகை யில், “இந்த ஆய்வில் மாவட்ட நிர் வாகம் சிறப்பான முறையில் செயல் பட்டு வருவது தெரியவந்துள்ளது. இன்னும் சில விஷயங்கள் செய் யப்பட வேண்டியுள்ளன. அவற்றைச் செய்ய அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பாக, புதன்கிழமை இரவு ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் ஆய்வு செய்தோம். அப்போது அங்கு  வசதிகள் இல்லை என்பது தெரிய வந்தது. அவற்றை உடனடியாக சீர்  செய்ய அறிவுறுத்தியுள்ளோம். அதே போல, குடியிருப்புகளில் தரையில்  இருந்து தண்ணீர் கொண்டு செல்வ தில் பல இடங்களில் சிரமம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். சுமார் 2,000 பேர் வீடுகள் மற்றும் பட்டா நிலம் கேட்டுள்ளனர். அதனை ஆட்சியர் ஆய்வு செய்து  நடவடிக்கை எடுப்பார். மேலும், அடிப் படை தேவைகள் தொடர்பாக மக்களி டமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள் ளன. தமிழ்நாடு முழுவதும் பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சனை உள் ளது. அவை தனியாக விசாரிக்கப் பட்டு வருகின்றன. சில இடங்களில்  அரசால் வழங்கப்படும் நிலங்க ளுக்கு உடனடியாகப் பட்டா வழங்கப் பட வேண்டும் என்று கூறியுள்ளோம். இதில் சில குளறுபடிகள் ஏற்படு கின்றன. ஆட்சியர் இதற்கான நில  வரையறை செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளார். கோவையில் பஞ்சமி  நிலங்கள் தொடர்பான பிரச்சனை களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூய்மை மற்றும் சுகா தாரப் பணிகளுக்கான ஊதியப் பிரச்சனை தொடர்பாக ஆணையம் தீர்வு காண அறிவுறுத்தியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.