tamilnadu

img

அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்க மாதர் சங்கம் கோரிக்கை

அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்க மாதர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், ஜூன் 22- அனைத்து பெண்களுக் கும் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாதர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் திருப் பூர் மாவட்டம், 15.வேலம் பாளையம் நகர 6 ஆவது மாநாடு, காமாட்சியம்மன் உலோகப் பாத்திரத் தொழி லாளர் சங்க கட்டடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. நகரத் தலைவர் வி.அழகு தலைமை வகித்தார். மாநகர துணைத்தலைவர் ஆ. கிருஷ்ணவேணி சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்தார். நகர துணைச்செயலாளர் ப. செல்வி வரவேற்றார். மாவட்ட துணைத்தலை வர் ஜி.சாவித்திரி துவக்கவுரையாற்றினார். நகரச் செயலாளர் ர.கவிதா அறிக்கையை முன்வைத்தார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பி.ஜெயலட்சுமி, பல்  மருத்துவர் எஸ்.பவித்ரா ஆகியோர் வாழ்த்தி  பேசினர். இம்மாநாட்டில், பெண்கள், பெண்  குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் களை தடுத்து நிறுத்த வேண்டும். விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.  மகளிர் உரிமைத் தொகையை அனைத்துப்  பெண்களுக்கும் வழங்க வேண்டும். குடும் பங்கள் மற்றும் இளைஞர்கள், குழந்தைகளை சீரழிக்கும் போதைப்பொருட்களை முற்றா கத் தடை செய்ய வேண்டும். வேலம்பாளை யம் அரசு மருத்துவமனையை உடனடியாக திறக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் நகரத் தலைவராக வே.அழகு, செயலாள ராக ர.கவிதா, பொருளாளராக ஆ.கிருஷ்ண வேணி உட்பட 15 பேர் கொண்ட நகரக்குழு  தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஷகிலா நிறைவுரையாற்றினார். முடிவில், ந.கோமதி நன்றி கூறினார்.