tamilnadu

மார்க்சிஸ்ட் கட்சியின் கிளர்ச்சி பிரச்சாரம்

மார்க்சிஸ்ட் கட்சியின் கிளர்ச்சி பிரச்சாரம்

சேலம், ஜூன் 16 – தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஒன்றிய, மாநில அரசுகளை வலியு றுத்தி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி எழுச்சிகர மக்கள் சந்திப்பு இயக் கத்தை நடத்தி வருகிறது. இதன்ஒருபகுதியாக, சேலம் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்க வாகனப் பிரச்சாரம்  ஞாயிறன்று நடைபெற்றது. சேலம்  மாநகர மேற்கு கமிட்டி சார்பில் பால்  மார்க்கெட் பகுதியில் பிரச்சார இயக்கத் திற்கு, மாநகர மேற்கு செயலாளர் பி  கணேசன் தலைமைஏற்றார். மாநில  செயற்குழு உறுப்பினர் செ.முத்து  கண்ணன் துவக்கி வைத்தார். இதில்,  இடைக்குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் என திரளானோர்  பங்கேற்றனர். சேலம் கிழக்கு மாநகரக் குழு சார் பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரப்பய ணத்தை வழக்கறிஞர் பொன். ரமணி  துவக்கி வைத்தார். மாநகரக் குழு செய லாளர்  கே. பச்சமுத்து தலைமையில்  அம்மாபேட்டை உழவர் சந்தை துவங்கி  பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற் கொண்டனர். இதில், மூத்த தலைவர் கள் பி.ராமமூர்த்தி, ஜி சுல்தான் உள் ளிட்ட திரளனோர் பங்கேற்றனர். கொங்கணாபுரம் கொங்கணாபுரத்தில் நடைபெற்ற இயக்கத்திற்கு கட்சியின் ஒன்றிய  செயலாளர் எஸ்.முத்துசாமி தலைமை  வைத்தார். இதில், கமிட்டி உறுப் பினர்கள், கிளைச்செயலாளர்கள் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  சேலம் தாலுகா  சேலம் இரும்பாலை அரங்க கிளை கள் சார்பாக  கணபதிபாளையம் துவங்கி, மோகன் நகர், மாரமங்கலத் துப்பட்டி வரை பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இதில், தாலுகா அமைப்புக் குழு உறுப்பினர் கே.பி.சுரேஷ்குமார், மூத்த தோழர் பி. பன்னீர்செல்வம் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தருமபுரி அரூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் அரூர் வட்டத்தில் பிரச்சாரம் நடை பெற்றது. காவிரி உபரிநீர் திட்டம்,செனாக்கல் அனைகட்டு திட்டம்,கோட்டப்பட்டி கல் லாறு அணைகட்டு திட்டம் ஆகிய வற்றை நிறைவேற்றவேண்டும்.தரும புரி -மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். தீர்த்தமலையை தலைமையிடமாகக் கொண்டு அரூ ரில் இருந்து பிரித்து தீர்த்தமலையை மையமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியமாக உருவாக்கவேண்டும். அரூரில் சேகோ தொழிற்சாலை அமைக்க வேண்டும். வனத்தை யொட்டி புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து விவசாயம் செய்து வருபவர்களை வனத்துறையினர் வெளியேற்றும் முயற்சியை கைவிட வேண்டும். தருமபுரியில் சிப்காட் அமைப்பதற்கான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் உள்ளிட்ட உள்ளூர்  கோரிக்கைகள் இந்த பிரச்சார இயக் கத்தில் முன்வைக்கப்பட்டது.  பிரச்சாரத்திற்கு ஒன்றியச் செயலா ளர் பி.குமார் தலைமை வகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப் பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் எம்.முத்து, ஆர். மல்லிகா உள்ளிட்டோர் உரையாற்றி னர்.  பென்னாகரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் பென்னாகரம் பேரூராட்சியில் மக் கள் சந்திப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட னர். இந்த பிரச்சார இயக்கத்திற்கு நகரச்  செயலாளர் பி.ஆர்.செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.மாரிமுத்து,வி.மாதன்,ஜி.சக்திவேல்,மாவட்டக்குழு உறுப்பினர் சி.ராஜி உள்ளிட்டோர் உரையாற்றினர். இப்பிரச்சார இயக்கம், பென்னாகரம் அம்பேத்கர் சிலை முன்பு துவங்கிய பிரச்சாரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் ,பேருந்து நிலையம் உள்ளிட்ட நக ரின் முக்கிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. திருப்பூர் திருப்பூர் தெற்கு ஒன்றியம் மங்கலம்  மற்றும் இடுவாய் ஊராட்சி பகுதிகளில்  ஞாயிறன்று பிரச்சார இயக்கம்  நடை பெற்றது. இந்த பிரச்சார இயக்கத்தை  இடுவாய் முன்னாள் ஊராட்சி மன்றத்  தலைவர் கணேசன் துவக்கி வைத்தார்.  பிரச்சார பயணத்தில் தெற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். கோவை கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திங்களன்று கொட்டும் மழையில் பிரச்சார இயக்கம் நடைபெற் றது. இதில், கோவை மாநகராட்சி 6%  சொத்து வரி உயர்வு என்பதை ரத்து  செய்ய வேண்டும். குப்பை சேகரிப்பை  முறைப்படுத்த வேண்டும். குடிநீர் விநி யோகத்தை முறையை படுத்த வேண் டும் உள்ளிட்ட உள்ளூர் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பேரூர் நகரக்குழு வின் சார்பில் நடைபெற்ற இப்பிரச்சார  இயக்கத்திற்கு நகரக் குழு செயலாளர் ஜி. சாந்தாராம் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். ஆர்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ்.மலையரசி  மற்றும் நகரக் குழு  செயலாளர்கள், கிளைச் செயலாளர் கள் கட்சி உறுப்பினர்கள் திரளாக பங் கேற்றனர். குலூர் சூலூர் இடைக் குழு சார்பில் நடை பெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக் கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.தெய்வேந்திரன், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் ரவீந்திரன், ஸ்டாலின் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் திரளாக  கலந்து கொண்டார். ஈரோடு ஈரோடு மாவட்டம், சத்தி வட்டத்தில்  தாலுகா செயலாளர் எம்.முருகன் தலை மையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது. உக்கரம் ஊராட்சி மற்றும் அரி யப்பம்பாளையம் பேரூராட்சி உட் பட 10 மையங்களில் மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு நகரச் செயலாளர் வாசு தேவன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. மாரப்பன், எஸ்.சுப்ரமணியன், மாவட் டக்குழு உறுப்பினர் எம்.விஜயகுமார்,  மூத்த தோழர் கே.ஆர்.திருத்தணிகாச லம், ராமதாஸ், தேவராஜ், கே.பாண்டி யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதில், பண்ணாரி அம்மன் சர்க்கரை  ஆலைக்கு கரும்பு கொடுத்த விவசாயி களுக்கு ஆலை நிர்வாகம் கொடுக்க வேண்டிய 14 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  நம்பியூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு, தாலுகா  உறுப்பினர் கே.சி.ரங்கசாமி தலைமை  வகித்தார். கொளப்பலூரில் துவங்கிய  பிரச்சார இயக்கத்தை மாநிலக் குழு உறுப்பினர் வி.அமிர்தலிங்கம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இவ்வி யக்கம் அக்கரை பாளையம், கோசனம்,  மூணாம்பள்ளி, நடுப்பாளையம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில், கட்சியின் மூத்தநிர்வாகி ஏ.எம்.முனுசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

போட்டோ சூட் பிரதமர்

பிரச்சார இயக்கத்தில் பங்கேற்று  செ.முத்துக்கண்ணன் பேசுகையில்,  அகமதாபாத்தில் எதிர்பாராத விதமாக நடைபெற்ற விமான விபத் தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். பிரதமர் மோடி விபத்து நடந்த இடத்திற்கு செல்லும்போதும், மருத்துவமனைக்கு செல்லும் போதும் பல்வேறு உடைகளை மாற்றி மாற்றி அணிந்துள்ளார். இதி லிருந்தே தெரிகிறது பிரதமர் மோடி துக்க நிகழ்விலும் போட்டோ சூட்  நடத்தும் ஒரு நபராகவே இருக் கிறார். அரசு பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, முறையாக பராமரிப்பு செய்யாததன் விளைவாகவே இந்த  விபத்து நடைபெற்றுள்ளது. எனவே,  தான் விமான போக்குவரத்து நிறுவ னங்களை அரசே ஏற்று நடத்த  வேண்டும். அப்போதுதான் பொது மக் களுக்கு பாதுகாப்பாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக புதுப்புது பிரச்சனைகளை பாஜக அரசு உருவாக்கி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு புல்வாமா தாக்குதல், காஷ்மீர் பிரச் சனையை கையில் எடுத்தது. தற் போது தேர்தல் வரவுள்ள சூழ்நிலை யில் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பு  உள்ளிட்ட செயல்களை திட்டமிட்டு செய்வதை காட்டுகிறது. காஷ்மீரில்  உள்ள கனிம வளங்களை அழிக் கவே, அங்கு பல பிரச்சனைகளை பாஜக அரசு செய்து வருகிறது. காஷ் மீரின் பலன்களை அம்பானி, அதானி  போன்ற பெரும் முதலாளிகளுக்கு விற்பனை செய்ய பல பிரச்சனை களை பாஜக செய்து வருகிறது.  நாட்டிலுள்ள மக்கள் அனைவரை யும் ஒரு பதட்டமான சூழ்நிலைக் குள்ளாகி வருகிறது.  வேலையில்லா திண்டாட்டம் ஒரு  மிகப்பெரிய பிரச்சனை. அதை சரி  செய்தால் நாட்டில் பல தீவிரவாத  செயல்கள் இருக்காது. அனைவருக் கும் வேலை கிடைப்பதை அரசு உத்த ரவாதப்படுத்த வேண்டும். ஏழை,  எளிய நடுத்தர மக்கள் பயன்படுத் தும் பொருட்களின் மீது ஜிஎஸ்டி  என்ற பெயரில் பல மடங்கு வரி  போட்டு மக்களிடம் கொள்ளை யடித்து வருகிறது. அனைத்து பொருட்களின் விலையும் பாஜக ஆட்சியில் உயர்ந்துள்ளது. தனி யார் நுண் நிதி நிறுவனங்கள் மூலம்  ஏழை, எளிய மக்களின் செல்வங்கள்  சுரண்டப்படுகின்றன. லாப நோக் குடன் செயல்படும் நுண் நிதி நிறுவ னங்களை அரசு கட்டுப்படுத்த வேண் டும். அனைத்து கடன் வசதிகள் மற் றும் நகை கடன்களை, பொதுத்துறை  வங்கிகள் மூலம் வழங்க வேண்டும்.  மக்களுக்கு எதிரான சட்டங் களையே பாஜக அரசு அமல்படுத்த நினைக்கிறது. இத்தகைய போக்கை விட்டு, மக்களுக்கு பலன ளிக்கக்கூடிய சட்டங்களை அமல் படுத்த வேண்டும். தமிழக அரசு தாராளமய பொரு ளாதாரக் கொள்கையை அமலாக்கு கிறது. இதனால் ஏற்பட்டுள்ள, பணி  நியமனங்களில் ஒப்பந்தம், அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண் டும். தொகுப்பூதியம், மதிப்பூதிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு, நிலமற் றவர்களுக்கு நிலம், வீட்டுமனைப் பட்டா, பஞ்சமி நிலங்களை மீட்க நட வடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் கட்டணம், வீட்டு வரி, மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துதல் திட் டத்தை அமல்படுத்தக்கூடாது என் றார்.