மகளிர் இலவச பயணத்திட்டத்தை சிறுமைப்படுத்தும் மேலாளர்
தமிழக முதல்வர் பெருமை யோடு சொல்லும் மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவதோடு, தொழிலாளர் விரோத போக்குடன் செயல்படும், கோவை அரசு போக்குவரத்துக் கழக ஒண்டிப் புதூர் கிளை மேலாளர் மணி வண்ணனின் நடவடிக்கையை கண்டித்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிஐடியு அரசு போக்குவரத்து கழக தொழிலா ளர் சங்க நிர்வாகிகள் கூறுகை யில், இந்த ஒண்டிபுதூர் கிளை மேலாளர் மணிவண்ணன், ஊழி யர்களுக்கு அவசர தேவைக ளுக்கு கூட விடுப்பு வழங்க மறுப் பது, மகளிர் இலவச பேருந்தில் கூடு தல் வசூல் கேட்பது, போக்கு வரத்து நெரிசலை கருத்தில் கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட கிலோ மீட்டர் இயக்க சொல்லி நிர்பந்தப் படுத்துவது என தொடர்ந்து தொழி லாளர்களுக்கு எதிராக செயல் பட்டு வருகிறார். தமிழக அரசு மகளி ருக்கு இலவச பயண திட்டத்தை பெருமையோடு பேசி வருகிற நிலையில், இவர், இத்திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். ஊருக்குள் ஆம்பிளைங்களே இல்லையா, பெண்களை மட்டும் தான் ஏத்துவீங்களா என்றெல்லாம் பேசி வருகிறார். இவர் மீது தமி ழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். முன்னதாக, ஒண்டிப்புதூர் கிளைத் தலைவர் திருஞானம் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், மாவட்ட பொதுச் செயலா ளர் வேளாங்கண்ணி ராஜ், மாவட் டப் பொருளாளர் பி.மகேஷ் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். சிஐடியு கோவை அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சங்கம் சார் பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் அனைத்து கிளை நிர்வாகி கள் மற்றும் போக்குவரத்து ஊழி யர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.