tamilnadu

img

கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்துக

கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்துக

ஈரோடு, ஜூன் 16- புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் தொகுப்பு முடிவு றும் நிலையில் புதிய தொகுப்பினை அமுல்படுத்தி கட்டண மில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் என அரசு ஊழி யர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், திங்க ளன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ச.விஜய  மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொருளாளர் ஆர்.சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதனையடுத்து, முதலமைச்சருக்கு அனுப்பும் வகை யில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே  ஏற்று நடத்த வேண்டும். கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டு  திட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அரசாணையில் அரசு  ஊழியர்கள் பயன்பெறுவதில் நடைமுறை சிக்கல்களை களைந்திட வேண்டும். மாவட்ட அளவிலான குறைபாடு களை களைந்திட மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம்  நடத்தி சங்க பிரதிநிதிகள் கருத்துகள் பெறப்பட வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கோவையில் மினி பேருந்துகள் சேவை துவக்கம்

கோவை, ஜூன் 16- கோவையில் பேருந்து செல்லாத கிராம வழித்தடத்தில் மினி பேருந்துகள் சேவை துவக்கப்பட்டுள்ளதால், கிராமப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி  பேருந்து சேவை துவக்க விழா சென்னையில் திங்களன்று காலை நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி  காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை துவக்கி  வைத்தார். இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், விரிவாக் கம் செய்யப்பட்ட 22 பழைய வழித்தடம் மற்றும் 8 புதிய வழித்  தடம் என மொத்தம் 30 வழித் தடத்தில் மினி பேருந்து சேவை  துவக்க விழா காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலைய வளாகத் தில் நடைபெற்றது. கோவையில் நடந்த நிகழ்வில், ஆட்சியர்  பவன்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ் குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), கோவை மாந கராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ஆகியோர் இச்சேவையை கொடி அசைத்து துவக்கி வைத் தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மினி பேருந்துகள் மீண்டும்  இயங்க துவங்கி உள்ளதால், கிராமப்பகுதி மக்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். இதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘’ஏற்கனவே டவுன் பஸ்கள் இயங் கக் கூடிய 65 சதவீதம் இடம், டவுன் பஸ்கள் செல்ல முடி யாத பகுதிகள் 35 சதவீதம் இடம் என மொத்தம் 100 சதவீ தம் இடங்களிலும் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. மாவட் டம் முழுவதும் இதுவரை 116 வழித்தடத்தில் மினி பஸ் கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது, நகர்ப்புற  பகுதி மக்களை விட, கிராமப்புற பகுதி மக்களுக்கு பெரிதும்  பயன் உள்ளது ஆகும். மிக குறுகலான சாலையில் கூட  இந்த மினி பஸ்களை இயக்கி, மக்களுக்கு சேவை அளிக்க  முடியும்’’ என்றார்.