tamilnadu

img

சிறப்பு கண்காணிப்பு மையத்தின் முயற்சி யானை - மனித மோதல் சம்பவங்கள் குறைந்தது

சிறப்பு கண்காணிப்பு மையத்தின் முயற்சி யானை - மனித மோதல் சம்பவங்கள் குறைந்தது

கோவையில் தமிழ்நாடு வனத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு மையம் மூலம் யானை - மனித மோதல் சம்பவங்கள் வெகுவாக குறைந்து  வருவதாக ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேற்கு  தொடர்ச்சி மலை அடிவாரத்தில்  உள்ள மதுக்கரை, போளுவாம் பட்டி, கோவை, மேட்டுப்பாளை யம், சிறுமுகை, காரமடை, பெரிய நாயக்கன்பாளையம் ஆகிய 7  வனச்சரகங்களில் 30 வகையான விலங்குகள், 849 வகை தாவரங் கள், 440 வகை பறவைகள், 29  வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை -  மனித மோதல் நீண்ட கால பிரச் சனையாக இருந்து வருகிறது. அதே போல யானைகளின் எண் ணிக்கையும் தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. கடந்த 2017 இல் 90  யானைகள் இருந்த நிலையில், 2023 இல் 190 யானைகளும், 2024 இல்  யானைகள் எண்ணிக்கை 336 ஆக வும் உயர்ந்துள்ளது. யானைகள் பொதுவாக சமதள பகுதிகளை தங் களது வலசை பாதைகளாக பயன் படுத்தி வருகிறது. இதில் வனத்தை  ஒட்டி சுமார் 360 கிலோ மீட்டர் வன எல்லைகளில் யானைகள் இடம் பெயர்ந்து வருகிறது. ஆனால் வன எல்லைகள் குறுகி விவசாய நிலங்களிலும், கட்டுமான பணிகள் நடந்துள்ளதால் யானைகள் வலசை பாதைகளை மாற்றி விவ சாய நிலங்களுக்குள்ளும், குடியி ருப்பு பகுதிகளிலும் உலா வருகி றது. இதனால் விவசாய பயிர்க ளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு  யானை - மனித மோதலும் நடந்து  வருகிறது. குறிப்பாக வன எல்லை  சுருக்கமும், வலசை பாதை மாற்றம்  ஏற்படுவதால் ஏற்படும் குழப்பத் தில் யானைகள் ஊருக்குள் வருகி றது. கடந்த 2011 முதல் 2024 வரை  யானை தாக்கி 185 பேர் உயிரி ழந்துள்ளனர். அதே போல மனித தவறுகளால் 2010 முதல் 2024 வரை 210 யானை கள் உயிரிழந்துள்ளது. அதே போல  கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், யானைகள் 14,962 முறை வனத்தை விட்டு வெளியேறி உள்ளது.  இதில் யானை - மனித மோதல் மூலம் உயிர் சேதம், காயம், பயிர்  சேதம் என ரூ.8.4 கோடி வரை  தமிழ்நாடு அரசு சார்பில் இழப்பீடு  வழங்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் தமிழ்நாடு அரசின் புத்தாக்க முயற்சிகள் கீழ் யானைகள் பாது காப்பு ஆராய்ச்சி மற்றும் முரண் பாடு மேலாண்மை மையம் கோவையில் உள்ள மாவட்ட வன  அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள் ளது. முதல் கட்டமாக மதுக்கரை, மரு தமலை, தடாகம் வன எல்லையில்  தெர்மல் மற்றும் சாதாரன கேமரா  என மூன்று வகை கேமராக்கள் அமைத்து, கட்டுப்பாட்டு அறையில்  இருந்து வனத்துறையினர் கண் காணித்து வருகின்றனர். இதன்  மூலம் யானைகள் வன எல்லை களுக்கு வரும் போது, உடனடியாக வனத்துறை ஊழியர்களுக்கு தக வல் அளிக்கப்பட்டு, யானை வனப் பகுதிக்குள் விரட்டப்படுகிறது. இத னால் யானை மோதல் சம்பவங் கள் குறைந்து வருகிறது. கடந்த 3 மாதங்களாக கண்காணித்து வரும் நிலையில் யானை மனித மோதல் வெகுவாக குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக் கின்றனர். இது குறித்து பேசிய சிறப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் நவீன், “கோவையில் யானை மனித  விலங்கு மோதலை தடுக்க இந்த  சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள் ளது. தெர்மல் கேமரா மற்றும் சாதா ரண கேமராக்கள் என மூன்று வகை  கேமராக்கள் மூலமாக வன எல்லை களுக்கு வரும் யானை உள்ளிட்ட  வனவிலங்குகள் கண்காணிக்கப் படுகிறது. அவ்வாறு யானைகள் வரும்போது உடனடியாக இரவு  நேர வனத்துறை பணியாளர்க ளுக்கு தகவல் அளிக்கப்படுகிறது. அவர்கள் யானையை வனப் பகுதிக்குள் பத்திரமாக விரட்டு கின்றனர். இதன் காரணமாக யானை மனித விலங்கு மோதல் குறைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் யானை மனித விலங்கு மோதல் வெகுவாக குறைந்துள்ளது. அதற்கான தரவு களை சேகரித்து வருகிறோம். மேலும் 24 மணி நேரமும் இந்த கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இதனை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக தரம் உயர்த்துவதற்கான முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. அதேபோல காட்டு யானை கள் எந்த வழியாக வெளியே வரு கிறது, என்பதை கண்டறிந்து அங் கும் கேமராக்களை பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது” என தெரி வித்தார். காட்டு யானை உள்ளிட்ட எந்த  ஒரு வன விலங்கும் மனிதர்களை தாக்க வேண்டும், பயிர்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத் தில் வனத்தை விட்டு வெளியே வரு வது இல்லை. அதன் வழித்தடம் மற்றும் வாழ்விடத்தில் ஏற்படும் மாற்றங்களால் வருகிறது. அதே நேரத்தில் விவசாயிகளும் தங்கள் விளை பொருட்களையும், வாழ் வாதாரத்தையும் பாதுகாக்க போராடி வருகின்றனர். இதனை சம நிலைபடுத்தி யானை - மனித மோதலை தடுக்க வனத்துறை மேற் கொண்ட இத்தகைய முயற்சி களும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.