ரத்த தான முகாம்
நாமக்கல், ஜூன் 8- குமாரபாளையத்தில் ஞாயிறன்று நடைபெற்ற ரத்த தான முகாமில், பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தளிர்விடும் பார தம் அறக்கட்டளை, அரசு பொது மருத்துவமனை இணைந்து, உலக ரத்த தான கொடையாளர்கள் தினத்தை முன் னிட்டு, ரத்த தான முகாம் குமாரபாளையம் அரசு பொது மருத் துவமனை வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. அறக் கட்டளை தலைவர் சீனிவாசன், ஈரோடு மாவட்ட ரத்த தான ஒருங்கிணைப்பாளர் கவியரசு ஆகியோர் தலைமை வகித்த னர். மருத்துவர் நித்தியானந்தன் முகாமை தொடங்கி வைத் தார். குமாரபாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற் றும் ரத்த கொடையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட் டோர் ரத்த தானம் செய்தனர்.
போதை மாத்திரை விற்பனை: ஒருவர் கைது
சேலம், ஜூன் 8- சங்ககிரியில் சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற் பனை செய்து வந்தவரை காவல் துறையினர் கைது செய்த னர். சேலம் மாவட்டம், சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன், முதுநிலை காவலர் முருகன் ஆகி யோர் சந்தைப்பேட்டை பகுதியில் வெள்ளியன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தைப்பேட்டை, கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த சபரீசன் (21), புதிய எடப்பாடி சாலை, வாணியர் காலனியைச் சேர்ந்த சிவகுமார் (28) ஆகியோர், போதை மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற் பதாகவும், அதை சிறுவர்கள் சாப்பிடுவதுடன், குளுக் கோஸில் கரைத்து ஊசியாக செலுத்திக் கொள்வதாகவும் அப் பகுதி பொதுமக்கள் புகாரளித்தனர். இதையடுத்து சந்தைப் பேட்டையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை போலீ சார் விசாரித்துள்ளனர். அதில் சிவா என்கிற சிவகுமார் தப்பி ஓடினா். மேலும் இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டி ருந்த சபரீசனை விசாரித்ததில் வாகனத்தின் முன்பக்க கவ ரில் 10 போதை மாத்திரைகள் கொண்ட 10 அட்டைகள் வைத்தி ருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து உதவி ஆய்வா ளர் கண்ணன் வழக்குப்பதிந்து சபரீசனை கைது செய்து, அவ ரிடமிருந்த போதை மாத்திரைகள், இருசக்கர வாகனத்தை பறி முதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை மின்தடை
தருமபுரி, ஜூன் 8- தருமபுரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதி களில் செவ்வாயன்று (நாளை) மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. தருமபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பரா மரிப்புப் பணிகள் செவ்வா யன்று (நாளை) மேற்கொள் ளப்படவுள்ளது. இதனால் மதிகோண்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையம், கடைவீதி, அன்ன சாகரம், விருப்பாட்சிபுரம், கடகத்தூர், கொளகத்தூா், குண்டல்பட்டி, ஏ.ஜெட்டி அள்ளி, ஏ.ரெட்டி அள்ளி, வி. ஜி.பாளையம், செட்டிக் கரை, நீலாபுரம், வெள் ளோலை, கோம்பை, ஏ. கொல்லஅள்ளி, குளியா னூர், மொடக்கேரி, முக்கல் நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், சோலைக்கொட் டாய், மூக்கனூர், கொட்டா வூர், மாரவாடி, செம்மாண்ட குப்பம், நாயக்கன அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப் படும், என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொய் வழக்கை திரும்பப்பெற கே.சுப்பராயன் எம்.பி., வலியுறுத்தல்
ஈரோடு, ஜூன் 8- 42 பேர் மீதான பொய் வழக்கை திரும் பப்பெற நடவடிக்கை எடுக்க வேண் டும், என திருப்பூர் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன் முதலமைச்ச ருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கே.சுப்பராயன் எம்.பி முதலமைச்சருக்கு அனுப்பிய அம்மனு வில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் கடந்த 2022 ஏப்ரல் முதல் மாதந்தோறும் 5 ஆம் தேதி நேரடி கலந்தாய்வு அமர்வு கூட்டம் நடைபெற்று வந்தது.கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் புதியதாக பொறுப் பேற்ற, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியா ளர் வி.சுவாமிநாதன் மாதந்தோறும் நடைபெற்று வந்த நேரடி கலந்தாய்வு அமர்வு கூட்டத்தை, 5.7.2024 முதல் வழக் கம் போல நடத்த மறுத்ததோடு, மேற்படி கூட்ட அரங்கத்தை அலுவலக அறை யாக மாற்றம் செய்துள்ளார். மேலும், நேரடி கலந்தாய்வு அமர்வு கூட்டத் திற்கு சிப்காட் தொழிற்சாலை முதலாளி களின் ஆட்களை அழைத்து வரச் செய்து மோதலை உருவாக்க, கலவரத்தை தூண்ட முயற்சித்தார். மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மேற்கண்ட ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக் கையை எதிர்த்து, வழக்கம் போல நேரடி கலந்தாய்வு அமர்வு கூட்டத்தை நடத்த வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பெண்கள் உட்பட 42 பேரை காவல் துறை யினர் அராஜகமான முறையில் கைது செய்து திருமண மண்டபத்தில் காவ லில் வைத்திருந்து இரவு விடுவித்த னர். இருப்பினும் ஒன்றிய அரசு 1.7.2024 முதல் நடைமுறைப்படுத்திய, பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டத்தின் கீழ் பிணையில்லாத மற்றும் பத்தாண்டுகள் வரை தண்டனை வழங்கக்கூடிய கடு மையான சட்டப் பிரிவுகளில் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி உள்ளிட்ட 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக் கைகளைக் கண்டித்தும், மாவட்ட சுற் றுச்சூழல் பொறியாளரின் பொய் புகார் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். நேரடி கலந்தாய்வு அமர்வு கூட்டத்தை வழக்கம் போல கூட்ட அரங்கில் தொடர்ந்து நடத்த வேண்டும். மேலும் சிப்காட் பிரச்சினை களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண் டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை திரும்ப விரும்பும் மண்டபம் முகாம் வாசிகள் - 300 பேர் விருப்ப மனு
இராமநாதபுரம், ஜூன் 8- இராமநாதபுரம் மாவட்டம், மண்ட பம் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் 300 பேர் தங்களது தாயகம் திரும்ப விருப்ப மனு அளித்துள்ளனர். இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக் கட்டத்தி லிருந்தே தமிழகத்துக்கு இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்ற னர். விடுதலைப் புலிகளை வென்று 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்து விட்டதாக, இலங்கை அரசு அறிவித் தது. அதன்பின்னரும், இராமேசு வரத்துக்கு இலங்கைத் தமிழர்களின் வருகை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. தமிழகத்தில் 119 இலங்கைத் தமி ழர்கள் மறுவாழ்வு இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாம் களில் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்ற னர். இதில் 33 ஆயிரத்துக்கும் அதிக மானோர் காவல் நிலையங்களில் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 3 ஆண்டுகளில் தனுஷ்கோடிக்கு வந்த 314-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை கைது செய்யாமல், மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழ்நாடு அரசு தங்க வைத்துள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டு இலங்கையில் புதிய அதிபராக அநுர குமார திசாநாயக்க பதிவியேற்ற பின்னர், இலங்கை பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால், தமிழ கத்திலுள்ள இலங்கைத் தமிழர்கள் சட்ட விரோதமாக படகுகளில் தங்களது தாயகம் செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில், மண்டபம் முகாமில் உள்ள 300 இலங்கைத் தமிழர்கள் தாயகம் செல்ல இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடமும், சென்னை யில் உள்ள அகதிகள் மறுவாழ்வு ஆணையரிடமும் விருப்ப மனு அளித்துள்ளனர். அரசு விதிமுறைப் படி, இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை தெரிவித்த 2 பேர் கைது
சேலம், ஜூன் 8- தலைவாசல் அருகே கருவில் இருக் கும் சிசுவின் பாலினத்தைக் கண்ட றிந்து தெரிவித்ததாக 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் வடக் குப்புதூர் காட்டுக்கொட்டாய் பகுதி யைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகன் கண்ணன் (37). இவரது தோட் டத்து வீட்டின் மாடியில், பனமரத்துப் பட்டியைச் சேர்ந்த பிரசாந்த் (38), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணிவண் ணன் (36) ஆகியோர், கடந்த மூன்று நாள் களாக கருவுற்ற பெண்களின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கருவி மூலம் கண்டறிந்து தெரி வித்து வந்துள்ளனர். இதுகுறித்து தக வலறிந்த தருமபுரி மாவட்ட மருத்துவ இயக்குநர் சாந்தி, மருத்துவக்குழுவின ருடன் சென்று இருவரையும் பிடித்து ஆத்தூர் தலைமை மருத்துவர் ஜெய லட்சுமியிடம் ஒப்படைத்தார். மேலும், அவர்களிடமிருந்து கருவி மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்த னர். இதுகுறித்து தகவலறிந்த தலை வாசல் காவல் ஆய்வாளர் கந்தவேல் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.