tamilnadu

img

திமுக அணி வலுவாக உள்ளது தொல்.திருமாவளவன் பேட்டி

திமுக அணி வலுவாக உள்ளது தொல்.திருமாவளவன் பேட்டி

கோவை, செப். 13- ஒரு அணி வடிவமாக, வலுவாக இருக்கிறது என் றால் அது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி தான். வேறு எந்த அணியும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியில் எந்த  பாதிப்பையும் ஏற்படுத்தாது என தொல்.திருமாவள வன் தெரிவித்தார். கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் அரங் கில் சென்ரல் பாங்க் ஆப் இந்தியா SC/ST ஊழியர்கள்  கருத்தரங்கு நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. இதில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திரு மாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித் தாவர், பிரச்சாரம் துவங்குகின்ற விஜய்க்கு வாழ்த்து கள், இப்பொழுதுதான் அவரது களப்பணிகள் தீவிர மடைகிறது. விஜயின் பிரச்சாரம் தாக்கத்தை ஏற்ப டுத்துமா என்று பலராலும் கேள்வி எழுப்பப்படுகிறது. கணிசமான வாக்குகளை விஜய் பெற முடியும். ஆனால்  திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட் டணி வெற்றியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று  நம்புகிறேன். அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒரு அணி வடிவ மாக வலுவாக இருக்கிறது என்றால் அது திமுக தலை மையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறதாக சொல் லப்படுகிறதே தவிர இன்னும் அது வடிவம் பெற வில்லை. விஜய் தனியாக செல்வார் என்று தான் கூறு கிறார்கள். தனியாக ஒரு அணி கட்டுவார் என்ற ஒரு  யூகம் இருக்கிறது. ஆனால் அதுவும் இன்னும் வடிவம்  பெறவில்லை. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக களத்தை சந்திக் கப் போகிறார்கள். அணியாக சந்திப்பதற்கு வாய்ப் பில்லை. பாஜக அதிமுக பிரிந்தால் திமுகவில் இருக் கின்ற கூட்டணி கட்சிகள் மாறுவதற்கு எந்த தேவையும்  இல்லை என்றார். மேலும், அண்ணாமலை பாஜக கட்சிக்குள்ளேயே ஒரு அரசியல் செய்கிறார் என்றும் நயினார் நாகேந்தி ரன் தலைமையை ஏற்றுக் கொள்வதில் அண்ணா மலைக்கு சிக்கல் உள்ளது என்பது அவரது நடவ டிக்கையில் தெரிகிறது. அண்ணாமலை நடவடிக்கை கள் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடியை உரு வாக்குவது போன்று தான் எனக்கு தோன்றுகிறது என் றார்.