tamilnadu

img

இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூன் 7- பாலஸ்தீனம் மீது இஸ்ரேல்  நடத்தி வரும் இனப்படுகொலை யைக் கண்டித்து மார்க்சிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது  இஸ்ரேல் தொடங்கிய கொடூரத் தாக் குதல், தொடர்ந்து நீடித்து வருகி றது. ‘ஹமாஸ் அமைப்பின் தீவிரவா தத்தை ஒடுக்குகிறோம்’ என்று கூறிக்கொண்டு தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதல் மூலம், ஆயிரக் கணக்கான அப்பாவி பாலஸ்தீனர் கள் இனப்படுகொலை செய்யப்பட் டுள்ளனர். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நேரடியாகவும், மறை முகமாகவும் ஆதரவளித்து வருகின் றன. இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை உடன டியாக நிறுத்த வேண்டும், என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட் சியின் வட்டச் செயலாளர் பி.கார்ல் மார்க்ஸ் தலைமை வகித்தார். இதில்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, மாவட் டக்குழு உறுப்பினர் சி.கலாவதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட் டச் செயலாளர் ஏ.சேகர், சிபிஎம் வட் டக்குழு உறுப்பினர்கள் பி.கோவிந்த சாமி, என்.வரதராஜன், பி.முருகன், ஜி.நக்கீரன், பி.ஆறுமுகம், வாலிபர் சங்க நிர்வாகிகள் வி.ரவி, கே.சத்ய ராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.