tamilnadu

img

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை, டிச.29- கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன் றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன் றத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவை ஆடிஸ் தெருவில் உள்ள பத்தி ரிக்கையாளர் மன்ற வளாகத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமது உயிரையும் துச்சமாக கருதி மக்கள் பணியாற்றி, அதனால் தொற் றுக்கு ஆளாகி உயிரிழந்த பத்திரிக்கையா ளர்களுக்கு இரங்கல் தெரிவித்தும்,  அவர்க ளது குடும்பத்தினருக்கு தேவையான உதவி களை அரசு செய்ய வேண்டும் என வலியு றுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத்தொடர்ந்து 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில், மன்றத்தின் புதிய தலைவராக க.தங்கராஜா (தினமணி), செய லாளராக ஏ.ஆர்.பாபு (தீக்கதிர்), பொருளா ளராக பி.ஆர்.முத்துப்பாண்டி (புதிய தலை முறை ), துணைத் தலைவர்களாக வி. பேச்சிக்குமார் (தினமணி), வி.பாலதண்டா யுதம் (தினகரன்), இணை செயலாளர்களாக ஜே.மனோகரன் (தி இந்து தமிழ் திசை), எஸ்.சீனிவாசன் (ஈ நாடு டிவி) ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக பி.சங்கீதா (டைம்ஸ் ஆப் இந்தியா), பி.சி.ரமேஷ் (பாலிமர் டிவி), டி.ஜி.ரகுபதி (தி இந்து தமிழ் திசை), ஆர்.கிருபாகரன் (தி இன்டி யன் எக்ஸ்பிரஸ்), ஆர்.ரவிக்குமார் (மாலை முரசு), வி.நித்தின் (சன் டிவி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் கோயமுத்தூர் பத்திரிக்கையா ளர் மன்றத்தின் உறுப்பினர்கள் திரளா னோர் பங்கேற்றனர். நிறைவாக முன்னாள் செயலாளர் எம்.சரவணன் நன்றி தெரிவித் தார்.

;