tamilnadu

img

கோவை: பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா! வீடியோ வெளியானதால் பதற்றம்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள  ரூட்ஸ்  நிறுவன பெட்ரோல் பங்கில் பெண்கள் உடைமாற்றிய  வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

கோவையில் 4 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் பணிபுரியும் சுபாஷ் என்பவர் பெண்கள் உடை மாற்றும்  அறையில் ரகசிய கேமராவை வைத்து உடைமாற்றுவதை  பதிவு செய்தார்.  அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் இது குறித்து அதே பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தனது கணவர்  மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இது குறித்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த நிலையில் சுபாஷ்யை பணிநீக்கம் செய்தது. ரூட்ஸ் நிறுவனம் காவல்நிலையத்தில் வைத்து சுபாஷை மிரட்டினர். ஆனால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்பப்படவில்லை. இந்நிலையில் பெண்கள் உடைமாற்றும்  காட்சிகள் சமூக வலைத்தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து சாய்பாபா காவல்நிலையத்தில் வீடியோ குறித்து 4 மாதம் முன்பாகவே முறையாக புகார் கொடுத்து விட்டதாக ரூட்ஸ் நிறுவன இயக்குனர் கவிதாசன் தெரிவித்துள்ளார். வீடியோ தொடர்பாக ரூட்ஸ் நிறுவனத்தில் இருந்து எங்களுக்கு எந்த புகாரும்  கொடுக்கப்படவில்லை என சாய்பாபா காவல் துறையினர் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;