சிஐடியு காத்திருப்புப் போராட்டம் அறிவிப்பு
ஈரோடு, ஜூன் 23 – ஈரோடு மாநகராட்சியில் பணிபுரி யும் நிரந்தரமற்ற தூய்மைப் பணி யாளர்களுக்கு 14 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்கப்படாததை கண்டித்து, ஜூன் 30 அன்று மாநக ராட்சி அலுவலகம் முன்பு காத்திருப் புப் போராட்டம் நடத்தப்படும் என சிஐ டியு அறிவித்துள்ளது. ஈரோடு மாநகராட்சி 4 மண்டலங் கள் மற்றும் 60 வார்டுகளைக் கொண் டுள்ளது. இங்கு பொது சுகாதாரப் பிரி வில் கணிசமான நிரந்தரமற்ற தூய் மைப் பணியாளர்கள் பணிபுரிகின்ற னர். பணி நிரந்தரமற்ற தொழிலாளர் களுக்கு, குறைந்தபட்ச கூலி சட்டத் தின்படி ஆண்டுதோறும் ஊதியம் மற்றும் அகவிலைப்படியை தமிழ் நாடு அரசு நிர்ணயித்து அறிவிக்கி றது. ஆனால், இத்தொழிலாளர்க ளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படு வதில்லை. பிற கோரிக்கைகளை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி புறக் கணித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, மாநகராட் சியின் இந்தப் போக்கைக் கண்டித்து, கடந்த டிசம்பர் 7 அன்று சிஐடியு வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து, தொழி லாளர் உதவி ஆணையர் (சமரசம்) சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதியளித்தார். இதனை ஏற்று சிஐடியு போராட்டத்தை ஒத்திவைத் தது. ஊதிய உயர்வு மட்டுமின்றி, பணி யாளர்களின் வேலை, வேலை நேரம், வேலைப்பளு, வாகனப் பற்றாக் குறை, டிபிசி (Daily Paid Contract) பணியாளர் பிரச்சினைகள், குடிநீர் விநியோகம் செய்யும் ஊழியர் களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட வைப்பு நிதி திட்டத்தில் செலுத் தப்படாதது போன்ற முறைகேடான மற்றும் சட்ட விரோத நடவடிக்கை கள் குறித்தும் சிஐடியு முறையிட் டுள்ளது. ஆனால், இந்த எந்தக் கோரிக்கைகள் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மாநகராட்சியின் தொடர் புறக் கணிப்பைக் கண்டித்து, வரும் ஜூன் 30 ஆம் தேதி, வேலையைப் புறக் கணித்து, மாநகராட்சி அலுவலகத் தில் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன், எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிஐடியு மாவட்ட ஆட் சியரிடம் மனு அளித்தனர்