tamilnadu

img

சாயக் கழிவுகளால் மஞ்சள் நிறமாக மாறிய பவானி ஆறு

சாயக் கழிவுகளால் மஞ்சள் நிறமாக மாறிய பவானி ஆறு

ட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதி யில் பாய்ந்தோடும் பவானி ஆற்று நீர், தொழிற் சாலை மற்றும் சாயக் கழிவுகள் கலப்பதால் மஞ்சள்  நிறத்திற்கு மாறியுள்ளது. இதனால் அப்பகுதி  மக்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ள னர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆற்றில் கடந்த சில மாதங்களாக தொழிற்சாலை மற்றும் சாயக் கழிவுகள் கலப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து அப் பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழ்நாடு  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் தொடர்ச்சி யாக முறையிட்டு வந்தனர். இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகள் கடந்த மாதத்தில் இருமுறை சிறுமுகை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆற்று நீரை மாதிரி சேகரித்துச் சென்றனர். ஆனால், அதன்  பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மேலும், சாயக் கழிவுகளை ஆற்றில் கலக் கும் தனியார் ஆலைகளை கண்டறிந்து நடவ டிக்கை எடுக்கவும் இல்லை. இந்நிலையில், கடந்த  இரண்டு நாட்களாக பவானி ஆற்று நீர் மீண்டும் மஞ்சள் நிறமாக மாறி முற்றிலும் மாசடைந்து காணப்படுகிறது. இதனால், குடிநீருக்காக இந்த ஆற்று நீரை நம்பியுள்ள சிறுமுகை மற்றும் அத னைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும் அச்சத் தில் ஆழ்ந்துள்ளனர். “இனி யாரிடம் புகார் தெரிவிப்பது?” என்று செய்வதறியாது தவிக்கும் அப்பகுதி மக்கள், தமி ழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தீவிர  கவனம் செலுத்தி, காரணமானவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளனர். நொய்யல் ஆற்றில் திறக்கப்படும் சாயக்கழிவுநீர் இதைபோல, திருப்பூர் மாவட்டத்தில் செயல் பட்டு வரும் பனியன் நிறுவனங்களுக்கு துணி களில் நிறமேற்றி தர, ஏராளமான சாய ஆலைகள்  செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளிலிருந்து  சாயக்கழிவுநீர் வெளியேறி, நொய்யல் ஆறு  மாசடைந்து வருவதால், ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ முறை யில் சாயக்கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சாயக்கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு, தண்ணீர்  மீண்டும் பயன்படுத்தும் வகையிலும், சாயக் கழிவை திடக்கழிவாகவும் மாற்றி நொய்யல்  ஆற்றில் சாயக்கழிவு கலக்காத வகையில் திட்ட மிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சுத்திகரிப்பு  செய்ய அதிக பொருட்செலவு ஆவதால், சில  சாய ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யா மல் இரவு நேரங்களில் நொய்யல் ஆற்றில் கலந்து வருகின்றனர். இந்நிலையில், வியாழனன்று பகல்  நேரத்திலேயே திருப்பூர், தென்னம்பாளையம்  அருகே சாயக்கழிவுநீர் கலந்து இளஞ்சிவப்பு நிறத் தில் நொய்யலில் நீர் சென்றது பொதுமக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாசு  கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக  இதுகுறித்து ஆய்வு செய்து சாயக்கழிவை வெளி யேற்றும் ஆலைகள் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.