tamilnadu

img

ரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி கவன ஈர்ப்பு கூட்டம்

ரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி கவன ஈர்ப்பு கூட்டம்

கோவை, ஏப்.30– ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள், அப்பகுதி பொதுமக்கள் இணைந்து கவன ஈர்ப்பு கூட்டத்தை நடத்தினர். கோவை மாநகராட்சி, 56 ஆவது வார்டுக்குட்பட்ட ஒண் டிப்புதூர் ராமச்சந்திரா நாயுடு சாலையில் அமைந்துள்ள கடவு எண். 3-ல் மேம்பாலம் கட்டக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புதனன்று அனைத்துக்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற் றது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒண்டிப்புதூரில் இருந்து திருச்சி சாலையை அடைய சூர்யா நகர் ரயில்வே  கேட் வழியாக சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல  வேண்டியுள்ளது. பேருந்து வசதிகள் கூட இல்லாத இந்த  பாதையில், ரயில்வே கேட்டை மூடினால், சுமார், 3 கிலோமீட் டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலையை உருவாகும். சூர்யா நகர் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டால் ஒண்டிப் புதூர் பகுதியின் பொதுப் போக்குவரத்து முற்றிலும் தடை படும். எனவே, அரசு இப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து  மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும், என்றனர். முன்னதாக, சிவலிங்கபுரம், ஸ்ரீ காமாட்சி நகர், சக்தி நகர் ஆகிய குடியிருப்போர் நலச் சங்கங்களின் ஒருங்கிணைப்பா ளர் வி.தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன  ஈர்ப்பு கூட்டத்திற்கு குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் வி.சொக்கலிங்கம் வரவேற்றார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிங்கா நல்லூர் நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி, நகரக்குழு உறுப்பினர் பாண்டியன், அதிமுக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், குடியிருப்போர் நல சங்க செயலாளர் எஸ்.சுப்பரமணி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர். முடிவில், எம்.சங்கர் நன்றி கூறினார்.