கோவை, மார்ச் 30- கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சுமார் ரூ,65 லட்சம் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்நிதியை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ.குமார், தமிழக அரசிடம் வழங்க உள்ளதாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.