அவிநாசி, டிச.5- அவிநாசி அருகே தெக்கலூர் ஆலாம் பாளையத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடி யிருப்பு அருகே 15 அடி உயர தீண்டாமை சுவர் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சார் பாக கார்த்திகேயன் என்பவர் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் அளித்திருந்தார். இந்தபுகாரின்மீது, மாவட்ட ஆட்சி யரின் உத்தரவின்பேரில் வருவாய் ஆய் வாளர் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற் கொண்டு வருவாய்த் துறைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்ட தெக்கலூர் ஊராட்சி ஆலாம்பாளையம் ஆதி திராவிடர் காலனியில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இக் குடியிருப்பு பகுதிக்குப் பின்புறம் தனியார் நிலத்தைச் சுற்றி 15 அடி உயரத்தில், 300 மீட்டர் நிளத்திற்கு சுவர் அமைத்துள்ளார். இச்சுவர் அமைக்கும் போதே, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எதிர்ப்பையும் மீறி, சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பலமுறை மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த அ.கார்த்திகேயன் என்பவர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்பி இருக்கிறார். பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கோரி இருந்தார். இதைத் தொடர்ந்து ஆட்சியரின் உத்தர வின்பேரில், வருவாய் ஆய்வாளர் புதன் கிழமை ஆலம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு சென்று ஆய்வு மேற் கொண்டனர். இதில் காலி இடத்தில் வேறு குடியிருப்போ, விவசாயமோ இல்லாத நிலையில் மேற்படி சுவர் கட்டப்பட்ட விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிடர் காலனி இருக்கும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுவர் கட்டப் பட்டது என்பதையும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில் வரு வாய்த் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக கார்த்திகேயன் கூறி யுள்ளார்.