tamilnadu

img

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் உடலுக்குள் இருபது நாட்களாக சிக்கிக்கிடந்த ஊசி

மே.பாளையம், செப்.9- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள எம்.எஸ்.ஆர் புரம் பகுதியில் வசித்து வருபவர் பிராபகரன் (28). இவரது மனைவி மலர்விழி (20). கர்ப்பிணியான மலர்விழி கடந்த மாதம் ஆக.19 ஆம் தேதி பிரசவத்திற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு 20 ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் இருக்க,  குழந்தை பிறந்த அடுத்த நாளான 21 ஆம் தேதி தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்து குழந்தையின் இடது கையில் ஒரு ஊசியும், இடது கால் தொடை பகுதியில் ஒரு ஊசியும் செலுத்தப்பட்டுள்ளது. அன்று முதலே குழந்தை அழுது கொண் டிருந்த நிலையில் கடந்த மாதம் ஆக.31 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ் சார்ச் செய்யப்பட்டு தாயும், குழந்தையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்கு வந்த பின்னர் குழந்தை வலியால் துடித்தபடி இரவு, பகல் என விடாமல் அழுது கொண்டே இருந்துள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தையின் இடது கால் தொடை பகுதியும் வழக்கத்திற்கு மாறாக வீங்கி கொண்டே வந்துள்ளது.   இந்நிலையில், குழந்தையை குளிப் பாட்டியபோது குழந்தையின் இடது தொடையில் இருந்து மெல்லிய ஊசி வெளி நீட்டியபடி இருந்துள்ளது.  இதனால் அதிர்ச் சியடைந்த பெற்றோர், குழந்தையின் உடலை பார்த்தபோது செவிலியர் தடுப் பூசி போட்ட இடத்தில் ஊசி அகற்றபடா மல் இருந்தது தெரியவந்தது. அரசு மருத்துவ மனையில் நடைபெற்ற இந்த அலட்சிய போக்கால் பிறந்த பச்சிளம் குழந்தை கடந்த 20 நாட்களாக வலியில் துடித்து போயுள் ளது. தற்போது குழந்தையின் உடலில் சிக் கியிருந்த ஊசி அகற்றப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் அலட்சியமாக செயல்பட்ட பணி மருத்துவர் மற்றும் ஊசி செலுத்திய செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண் டும் என குழந்தையின் தாய் மலர்விழி மருத் துவமனை தலைமை மருத்துவரிடம் புகார் மனு அளித்துள்ளார். அரசு மருத்துவமனை யில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு நடை பெற்ற இச்சம்பவம் இப்பகுதி மக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.