கோவை, ஆக. 13- நொய்யல் ஆற்றில் இருந்து வரும் நீரை செங்குளத்திற்கு வராமல் திட்டமிட்டே ஆளும் கட்சியினர் தடுத் துள்ளதாகவும், உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் கோவை, பொள்ளாச்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். மழையால் கோவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடி யாக சரி செய்ய வேண்டும், பாதிக்கப் பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப் படையில் நிவாரணம் அளிக்க வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் திமுக பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சி யரை சந்தித்து செவ்வாயன்று மனு அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர் களை சந்தித்த கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், கோவையில் தொடர்ந்து கனமழை பெய்து நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும் செங் குளம் நிறையவில்லை. இந்நிலையில், சித்திரைசாவடி அணையில் இருந்து பேரூர் பகுதியில் உள்ள செங்குளத் திற்கு நீர் வருவதை வேண்டும் என்றே ஆளும் கட்சியினர் திட்டமிட்டே லாரி லாரியாக மண்ணைக்கொட்டி நீர் வரு வதை தடுத்துள்ளனர்.
எனவே குளத்திற்கு வரும் நீரை தடுத்தவர்கள் மீது. பாரபட்சமின்றி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மேலும், மழை காரணமாக ஆத்துப் பாலத்தில் 20 வீடுகள் சேதமடைந்துள் ளன. அவர்களுக்கு போர்கால அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நகர்ப்பகுதி யில் இருந்து ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் நுறாண்டுகளுக்கு மேலாக குடியிருந்த ஏழைஎளிய மக்களை அரசு நிர்வாகம் அநியாயமாக வெளி யேற்றி மாற்று இடம் என்கிற பெயரில் நகரத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தள்ளி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தள்ளிவிடுகிறார்கள். குடிசை மாற்று வாரியம் சார்பாக வழங்கப்படும் குடியி ருப்புகள் நகரப்பகுதியிலேயே வழங்க வேண்டும். குறிப்பாக உக்கடம் அருகில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்த மான நிலம் உள்ளது. இதனை துறை மாற்றி இங்கு வீடுகள் கட்டி அனைவரை யும் குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என தெரி வித்தார். இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் பேசுகையில், கோவையில் 25 ஏக்கர் நிலம் கொடுத்தால் ரூ.100 கோடி செலவில் உள்கட்டமைப்பு உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வர்த்தக மையம் அமைப்பது தொடர் பாக, டெல்லியில் உள்ள எம்.எஸ்.எம்.இ யின் நிர்வாக இயக்குனரை சந்தித் திருக்கிறேன். இம்மையம் அமைவதற்கு அடுத்தகட்ட நகர்களுக்கான பணியில் ஈடுபட்டுள்ளேன். பொள்ளாச்சி பாலியல் குற்ற வாளிகளை உடனடியாக கண்டறிய வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. தொடர் நிர்பந்தத்தின் காரணமாக இவ்வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ஆனால் இதுவரை உண்மை குற்றவாளிகளை சி.பி.ஐ கண்டறியவில்லை. மூன்று நான்கு பேரை சுற்றியே இவ்வழக்கின் விசா ரணை சென்று வருகிறது. உண்மையான குற்றவாளிகளை கண்டறிய பாதிக் கப்பட்ட பெண்களை சி.பி.ஐ அதிகாரி கள் தனியாக விசாரணை நடத்த வேண் டும் எனவும் வலியுறுத்தினார். முன்னதாக, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நூற்றுக் கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் தனித்தனியாக மனுக்களை அளித்தனர்.