கோவை, மே 14 – பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தி தேர்வுக்கான மனநிலையை மாணவர்களுக்கு உருவாக்கிய பின்னரே, பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என வலியு றுத்தி மாணவர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் அச் சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக் கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரி கள் காலவரையின்றி மூடப்பட் டுள்ளது. இதேபோல் கொரோனா தொற்று ஏற்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலை யில், ஜூன் மற்றும் ஜூலை மாதங் களில் இத்தொற்றின் தாக்கம் இந் தியாவில் அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரி வித்துள்ளனர். இந்நிலையில், தேர்வுக்கான மனநிலை மற்றும் தயாரிப்பு நிலையை மாணவர்களுக்கு உரு வாக்காமல் மாநிலக் கல்வித்துறை திடீரென பத்தாம் வகுப்புத் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த அறி விப்பு மாணவர்கள் மற்றும் பெற் றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்கத் தினர் வியாழனன்று கோவையில் சிங்காநல்லூர், இருகூர், நடுப் பாளையம் காரமடை, ஆனை மலை மற்றும் பொள்ளாச்சி உள் ளிட்ட பகுதிகளில் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தொற்று பாதிப்பு ஓரள வுக்கு கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு இரண்டு வாரங்கள் வழக்கம் போல் வகுப்புகள் நடத்தி மாணவர் களை தேர்வுக்குத் தயார் செய்த பின்னரே தேர்வுகள் நடத்த வேண் டும். ஏழை மாணவர்களின் மருத் துவக் கனவைப் பறிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்து, நடப்பாண்டில் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத் துவ கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற் சியை ரத்து செய்யும் முடிவை கை விட வேண்டும் என வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் இந் திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அசாருதீன், செயலாளர் தினேஷ் ரஜா, மாநில செயற்குழு உறுப்பினர் காவியா மற்றும் சஞ்சய்,ரமேஷ், ஜீவி,திவ்யா மற்றும்சந்தியா உள்ளிட்ட நிர் வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.