tamilnadu

img

திருப்பூர் வடக்கு பகுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாணவர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், செப். 22 – திருப்பூர் வடக்குப் பகுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கு மாறு இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு தாலுகா மாநாடு கோரிக்கை விடுத் துள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு தாலுகா மாநாடு ஞாயிறன்று வெங்க மேடு அலுவலகத்தில் நடைபெற்றது. சங் கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அருள், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வளர்மதி ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.  இறுதியாக 15 பேர் கொண்ட தாலுகா குழுவை அறிமுகம் செய்து வைத்து மாவட்டத் தலைவர் முகிலன் நிறைவுரை ஆற்றினார். இதில் மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது, துணைச் செயலாளர்  ரேவந்த் குமார் உட்பட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். புதிய தாலுகா தலைவராக தனசேகர், செயலாள ராக ஹரி ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். நகரின் வடக்குப் பகுதியில் மாணவ, மாண விகள் பள்ளி செல்லவும், தொழிலாளர் உள் ளிட்ட பலதரப்பினர் தங்கள் வேலைகளுக் குச் செல்லவும் போக்குவரத்து வசதி போது மானதாக இல்லாமல் நெருக்கடியில் சிர மப்படுகின்றனர். எனவே கூடுதல் பேருந் துகளை வடபகுதியில் இயக்க வேண்டும் என்றும் இம்மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.