tamilnadu

img

மடிக்கணினி கேட்டு மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜுலை 2 - பரமத்தி வேலூரில் கடந்த கல்வியாண்டு பயின்ற மாண வர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2017-18 கல்வியாண்டில் பிளஸ் 2 படித்து முடித்த மாண வர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வலியுறுத்தி நாமக்கல்லை அடுத்த பரமத்தி வேலூர் ஒன்றியம் கந்தசாமி கண்டர் பள்ளி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் பி.கோபால் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் தீபன் சுந்தர், சிதேஷ்குமார், தனசேகர், கமலீஸ்வரன், தனுஸ்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.