கோவை, அக். 1 – கௌரவமான ஓய்வூதியத்தை உறுதிப்படுத்தக்கோரி சர்வதேச ஓய்வூதிய தினத்தில் ஓய்வூதியர் சங்கங் களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஓய்வூதியத்தை தனியார்மய மாக்கும் நடவடிக்கைகளை அரசுகள் கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக் காதே, ஓய்வூதியர்களுக்கு கௌரவ மான வாழ்க்கை, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து சர்வதேச ஓய்வூதிய தினமான (அக்.1) வியாழ னன்று மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் ்தின் மாவட்ட தலைவர் என்.சின்ன சாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கே.ராகவேந்திரன் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன், பங்கஜவல்லி, குடிய ரசு, மதன், ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று முழக்கங் களை எழுப்பினர்.
தருமபுரி
தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி.பி.விஜியன், மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, அரசு ஊழியர் சங்க ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்ட செயலாளர் எம்.பெருமாள், அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் வி.சுப்பிரமணி, பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க கௌரவ தலைவர் வி.சுந்திரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.