tamilnadu

img

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் பொதுமக்கள் பாதிப்பு

மொடக்குறிச்சி பகுதியில் கனமழை

ஈரோடு,நவ.8- மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதிகளில் வியாழனன்று இரவு பெய்த கனமழையின் காரணமாக அண்ணா புது காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட அண்ணா புது காலனி பகுதியில் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு 80  குடும்பங்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. முன்ன தாக, இது தாழ்வான பகுதி, மழைக் காலங்களில் மழைநீர் வீடுகளுக் குள் புக வாய்ப்பு அதிகமாக உள் ளது. எனவே, இடத்தை மாற்றித் தர வேண்டும் என பட்டா வழங் கும் பொழுதே பயனாளிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி அப் பகுதி மக்கள் அங்கேயே வீடுகளை அமைத்து குடியிருந்து வருகிறார் கள். இந்நிலையில் அண்ணா புது காலனி பகுதியில் வியாழனன்று இரவு பெய்த கனமழையின் காரண மாக அப்பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசிப்போர் வீடுகளிலிருந்து வெளி யேறி தவிப்பிற்குள்ளாகினர். இது குறித்த தகவலறிந்த வருவாய் துறை யினர் உடனடியாக அப்பகுதிக் சென்று வெள்ளத்தில் தத்தளித்த வர்களை மீட்டு மொடக்குறிச்சி சமுதாய கூடத்தில் தங்க வைத்த னர். அதேநேரம், இத்தகைய இன் னல்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மீண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிஎம் நிர்வாகிகள்
நேரில் ஆய்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொடக்குறிச்சி அண்ணா புது  காலனி பகுதியை செய்த பொது மக்களை மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே.துரைராஜ், ப.மாரி முத்து, ஆர்.விஜயராகவன், கொடு முடி மொடக்குறிச்சி தாலுகா செய லாளர் கனகவேல் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களைப் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், மொடக்குறிச்சி பேரூ ராட்சி நிர்வாக அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோரை சந்தித்து உடனடியாக அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவி களை செய்து கொடுக்க வேண்டு மென கேட்டுக்கொண்டனர்.

கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு
இதற்கிடைய,  பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இந்நிலையில் வியா ழனன்று (நவ.7)  மாலையில் கடத் தூர் காவல்நிலைய சரகம் மல்ல நாய்க்கனூர், மில் மேடு பாலம் அருகில் கீழ்பவானி வாய்க்காலில் மண் கரையில் சுமார் 50 அடி தூரத் திற்கு உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள கேத்தம்பாளையம் காலனி, சின்ன பீலமேடு காலனி,  மல்ல நாய்க்கனூர் ஆகிய கிராமங்க ளுக்குள் வாய்க்கால் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து காவல்துறை சார்பில் உடனடியாக பவானி சாகர் அணை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து கீழ்பவானி வாய்க் காலில் திறந்துவிடப்படும் தண் ணீர் நிறுத்தப்பட்டது. அப்பகுதி கிராமப்புற பகுதியாக இருந்ததால் தட்டாம்புதூர் பாலம்,  கணேசபுரம் பாலம் மில் மேடு ஆகிய இடங் களில் கோபி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமை யில் உடனடியாக காவலர்கள் நிய மிக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட 70 குடும்பங்களைச் சார்ந்த சுமார் 110 பேர் பீலமேடு லட்சுமி கிரி மண்டபத்திலும்,  உக்கரம் சமு தாயக்கூடத்தில் 30 நபர்களும் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.