tamilnadu

தேர்வு எழுத தனியார் பொறியியல் கல்லூரி அனுமதி

கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாணவர் சங்கம் நன்றி

கோவை, நவ. 10 - அரசாணை எண் 92 படி கல்லூரியில் சேர்ந்த மாணவர்களை கட்டணம் கட்ட சொல்லி நிர்ப்பந்தித்து தேர்வு எழுத அனுமதிக்காத தனியார் கல்லூரியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை  மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததை யடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாணவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதித் துள்ளது. கோவை மாவட்ட ஆட்சியரின் உரிய தலையீட்டிற்கு இந்திய மாணவர்  சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் அசார், செயலாளர் தினேஷ் ராஜா ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, அரசாணை எண் 92 படி எஸ்சி,  எஸ்டி மாணவர்களுக்கு இலவசக் கல்வி  வழங்கப்பட வேண்டும். ஆனால் சமீப கால மாக அரசாணையை மதிக்காத போக்கு தனி யார் கல்லூரிகளில் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக கோவை  நேரு தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் களை கட்டணம் கட்ட சொல்லி தொடர்ச்சி யாக மிரட்டி வருகிறது. இந்நிலையில் பருவ  தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் அரசாணை எண் 92 படி அரசு நிர்வாகத் திற்கு பணம் தராவிட்டால் அந்த பணத்தை மாணவர்கள் கொடுத்தால்தான் தேர்வு எழுத  முடியும் என்று மாணவர்களை நேரு கல்லூரி  நிர்வாகம் நிர்ப்பந்தித்துள்ளது. இதனையடுத்து மாணவர் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித் தோம். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கான பருவ தேர்வு  எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என உறு தியளித்தார். இதனைத்தொடர்ந்து மாணவர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி தேர்வு எழுத அனுமதிக்கிறோம் என கல்லூரி  நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் உரிய தலையீட்டிற்கு மாணவர் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.