tamilnadu

img

கோவை அரசு மருத்துவமனை வார்டுகளில் ஒழுகும் மழை நீர் பக்கெட்டுகளில் வாரி இறைக்கும் நோயாளிகள்

கோவை, ஆக. 9- கோவை அரசு மருத்துவமனை யில் உள்ள நோயாளிகள் பிரிவில் ஒழுகும் மழை நீரை அங்கிருக் கும் நோயாளிகள் பக்கெட்டுகளில் பிடித்து வெளியேற்றி வருகின் றனர். கோவை அரசு மருத்துவ மனைக்கு தினந்தோறும் ஆயிரக் கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். அரசு மருத்துவ மனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்கிற குற்றச் சாட்டு தொடர்ந்து எழுந்து வருகி றது. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் தொற்றுநோய் வார் டில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், பழைய கட்டிடமான தொற்றுநோய் வார்டுக்குள் மழை நீர் வடியத்தொடங்கியது. இத னைப்பார்த்த அங்கிருந்த நோயா ளிகள் மற்றும் அவர்களது உறவி னர்கள் மழை நீரை பக்கெட்டு களில் சேமித்து பின்னர் வெளி யேற்றினர். இதனை ஒரு நோயாளி வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள் ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரசு மருத்துவமனையின் பல வார்டுகளில் இதே நிலை நீடிக்கி றது. மேலும், நோயாளிகளை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார் டுக்கு ஸ்டிரெச்சர் மூலம் அழைத்து செல்லும் போது அவர்களும் மழையில் நனைந்தபடியே செல் கின்றனர்.