tamilnadu

img

ஓமலூர் சிறுமி பாலியல் வல்லுறவு: குற்றவாளிகளை கைது செய்ய மறுக்கும் காவல்துறை

வாலிபர், மாதர் சங்கம் போராட்டம்

சேலம், நவ. 19- சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் 7 வயது சிறுமி அடை யாளம் தெரியாத நபர்களால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப் பட்டார். இதில் ஈடுபட்ட குற்ற வாளிகளை கைது செய்யாமல் அலட்சியம் காட்டும் காவல் துறையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள ஊ.மாரமங்கலம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 14ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளா னார். தற்போது அவர் சிகிச்சைக் காக சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாலியல் ரீதியான பிரச்சனை இருக்கும் போது அவர்களிடம் ஆண் காவலர்கள் விசாரணை மேற்கொள்ள கூடாது. குறிப்பாக சீருடையில் விசாரணை மேற் கொள்ள கூடாது, விசாரிக்கும் போது பெற்றோர்கள் அல்லது பாது காவலர்கள் உடனிருக்க வேண் டும் உள்ளிட்ட விதிகள் உள்ளது. ஆனால், சேலம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியிடம் விசாரணை என்ற  பெயரில் சிறுமியின் பெற்றோர் களை வெளியே அனுப்பிவிட்டு சீருடையில் இரு காவலர்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டுமாறு புகைப்படங்களை காட்டி விசாரித்துள்ளனர். மேலும் சிறுமியின் பெற்றோர்களிடம் மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப் புகளிடம் ஏன் சம்பவம் பற்றி பேசுகிறீர்கள் என மிரட்டி உள்ள னர். 

இந்நிலையில், சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பல நாட்களை கடந்தும் இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய மறுக்கும் காவல்துறையை கண் டித்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். பெண் குழந்தையின் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டிய காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் பெண் குழந்தைகளின் பாதுகாப் பிற்காக போராடும் ஜனநாயக அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட் டத்திற்கு அனுமதி மறுத்ததை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று வாலிபர் மற்றும் மாதர் சங்கத்தினர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜிஸ் குமார், மாவட்ட செயலாளர் கணே சன், மாவட்ட தலைவர் கந்த சாமி, மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.ஞான சவுந்தரி, மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் கே.ராஜாத்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  இதை யடுத்து போராட்டத்தில் ஈடுபட் டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் என்.ரெஜிஸ் குமார், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழக முதல் வரின் சொந்த மாவட்டத்திலேயே பெண்கள் மற்றும் பெண் குழந்தை களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. ஜனநாயக முறையில் முறையாக போராட்டம் நடத்த அனுமதி அளித்த காவல் துறையினர், பின்னர் அனுமதி மறுப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகவே, ஓமலூர் சிறுமி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை விரைவில் கைது செய்யாவிட்டால் மாநிலம் தழு விய போராட்டம் நடத்த உள்ள தாக அவர் தெரிவித்தார்.