கோவை, பிப். 26 - குறைந்த ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வலியு றுத்தி இபிஎப் ஓய்வூதியர் சங்கத்தினர் கோவையில் புதனன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோவை இபிஎப் பென்சனர் சங்கத்தின் தலைவர் கே.புஷ்ப ராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர் கே.பி.பாபு, எச்எம் எஸ் மாநிலச் செயலாளர் டி.எஸ்.இராசாமணி மற்றும் வே.வேணுபூபதி ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். இடைக்கால நிவார ணமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். அதிக அளவு ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள அனைவருக்கும் உச்சநீதிமன்ற ஆணையினை உடனே நடைமுறைப் படுத்து வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். முடிவில் எஸ.ஆர்.மணி நன்றி கூறினார்.