கோவை, ஜூலை 5- ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய் aப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக நாடாளுமன்ற பட்ஜெட் குறித்து இந்திய தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 2019-2020 ஆம் ஆண்டிற் கான மத்திய அரசின் பொதுநிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சித்தாரமன் வெள்ளியன்று நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்தார். இது தொடர்பாக இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு தலைவர் லட்சுமி நாரா யணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய தொழில் தொடங்கு வோருக்கு சலுகைகள் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதே சமயம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங் களுக்குப் புதிய அறிவிப்புகள் இல்லை. சிறு, குறு தொழில்துறை யினருக்கு புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வு காரணமாக அதன் விலை 2 ரூபாய் அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொழில் துறையினருக்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்ப தைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்திய வர்த்தகம் 3 டிரில்லியன் டாலர் வர்த்தமாக உயரும் என்ற அறிவிப்பு வரவேற் கத்தக்கது. பிளாஸ்டிக் மீதான இறக்குமதி வரி அதிகரித்துள்ள தால் உள்நாட்டு உற்பத்தி அதி கரிக்க வாய்ப்புள்ளது. மின் சக்தியில் இயங்கும் ஈ - வாகனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது வரவேற் கத்தக்கது. தொழில்துறையின ரின் 60 சதவிகித எதிர்பார்ப்பு களை பூர்த்தி செய்துள்ள போதும், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் கோரப் பட்ட ஜாப் ஆர்டர்களுக்கான வரி விதிப்பு ரத்து உள்ளிட்ட கோரிக் கைகள் நிறைவேற்றப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரி வித்தார்.
தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டாத பட்ஜெட்
மக்களவையில் தாக்கல் செய் யப்பட்ட பட்ஜெட் குறுசிறு தொழில்முனைவோர்களைக் கனவு காணும் பட்ஜெட்டாக உள்ளதைத் தவிர வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இல்லை என டேக்ட் அமைப்பு விமர்சனம் செய்துள் ளது. இதுகுறித்து தமிழ்நாடு கை தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலை வர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய பட்ஜெட்டில் குறுசிறு தொழில் வளர்ச்சிக்கு எந்த அறி விப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஜாப் ஆர்டர்களுக் கான ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு, வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு, கோவையில் ராணுவத் தளவாடம் தயாரிக்கும் பொதுத் துறைக்கான அறிவிப்பு இல்லா தது, சிறுகுறு தொழில்களுக்கான தொழில் பேட்டைக்கான அறி விப்பு இல்லாதது, பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து குறுந்தொழில்கள் வளர்ச்சிக்கு ஆர்டர்கள் பெறுவதற்கான வழி காட்டல்கள் இல்லாதது என, எவ்விதத்திலும் இந்த பட்ஜெட் குறுசிறு தொழில்வளர்ச்சிக்கு பயன் இல்லாததும் பலன் தராதது மான பட்ஜெட்டாக உள்ளது. உள் நாட்டு தொழில் வளர்ச்சிக்குவழி காட்டாத, சிறுகுறு ந்தொழில் முனைவோர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக பட்ஜெட்டாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.