tamilnadu

தருமபுரி மற்றும் கோவை முக்கிய செய்திகள்

தருமபுரி அரசு கல்லூரியில் கலந்தாய்வு ஜூன் 3 ல் தொடக்கம்

தருமபுரி, மே 31-தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 3 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளர்.இதுகுறித்து தருமபுரி அரசு கல்லூரி முதல்வர் சொ.ஹேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 3 ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 12 ஆம் தேதி வரை கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில், ஜூன் 3 ஆம் தேதி அனைத்து வகுப்புகளுக்கு சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு, முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் என்சிசி மாணவர்கள் ஆகியோருக்கு நடைபெறும். இதேபோல், ஜூன் 4 ஆம் தேதியன்று அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் பிளஸ் 2 வகுப்பில் பகுதி மூன்றில் 400 முதல் 351 மதிப்பெண்கள் வரை பெற்றவர்களுக்கும், ஜூன் 6 ஆம் தேதி 350 முதல் 326 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், ஜூன் 7 ஆம் தேதி 325 முதல் 301 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், ஜூன் 10 ஆம் 300 முதல் 276 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், ஜூன் 11 ஆம் தேதி 275 முதல் 251 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், ஜூன் 12 ஆம் தேதியன்று தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும் சிறப்புத் தமிழ் பயின்றோர் மற்றும் பிளஸ் 2 பகுதி 1, பகுதி 2-இல் 100 முதல் 76 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.எனவே, கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் உரிய நாள்களில் கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் முதிர்வு தொகை பெற அழைப்பு

கோவை, மே 31-இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் முதிர்வு தொகை பெற வைப்பு நிதி பத்திரத்தினை சமர்ப்பிக்கலாம் என கோவை மாவட்ட மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அழைப்பு விடுத்துள்ளார். கோவை மாவட்டத்தில், தமிழக முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பத்த 18 வயது பூர்த்தியடைந்த ஊரகப் பகுதியில்உள்ள பயனாளிகள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (பி.டி.ஓ)உள்ள மகளிர் ஊர்நல அலுவலர் (ஜி.எஸ்),விரிவாக்க அலுவலர்களை (எம்.எஸ்)நேரில் சென்று வைப்பு நிதி பத்திரத்தினை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் நகர்ப்புறபகுதியில் உள்ள பயனாளிகள், அந்தந்த பகுதிக்கான மண்டல அலுவலகங்களில் உள்ள மகளிர் ஊர்நல அலுவலர், விரிவாக்க அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.நேரில் செல்லும் பொழுது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு செல்லுமாறும் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தருமபுரி அருகே மின்னல் தாக்கி 4 பேர் காயம்

தருமபுரி, மே 31-தருமபுரி அருகே மின்னல்தாக்கி 4 பேர் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், ராஜாகொல்ல அள்ளி பகுதியைச் சேரந்தவர் முத்து, இவரதுமகள்கள் ஐஸ்வர்யா (19) அருகில் உள்ள கல்லூரியில்2 ம் ஆண்டு படித்து வருகிறார். சங்கீதா (16) பிளஸ் 2வகுப்பு முடித்துள்ளார்.  இந்நிலையில் வியாழனன்றுஇரவு பலத்த மலை பெய்தது. மலை நின்ற பிறகு ஐஸ்வர்யாவும்,சங்கீதாவும் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக மின்னல்தாக்கி இரண்டுபேரும் காயமடைந்தனர்.இதேபோல், அதேபகுதியைச் சேர்ந்த முனுசாமியின் மனைவி மாரி (35), மகள் சாலினி (18), ஆகிய இருவரும் மழை நின்றபின் கால்நடைகளுக்கு தீவனம் வைக்கென்றுள்ளனர்.அப்போது மின்னல்தாக்கி இருவரும் காயமடைந்தனர். படுகாயமடைந்த 4 பேரும் தருமபுரிஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இண்டூர் காவல்துறையினர் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.