கோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது
கோவை. பிப். 25- கோவை சரவணம்பட்டியில் கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், மணியக்காரன்பாளையத்தை ஒட்டிய பகுதியில் சரவணம்பட்டி காவல் துறையினர் ஞாயிறன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணியகாரம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து விசாரித்தபோது 200 ரூபாய் நோட்டு கட்டுகள் மூன்று கொண்ட 60 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தனர். அந்த பணத்தை போலீசார் சோதித்த நிலையில் அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரி யவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரையும் சரவணம் பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இவ்விசாரணையில் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கிதர் முஹம்மது (66) மற்றும் கவுண்டம்பா ளையம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (39) என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் தடாகம் ரோடு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சூரியகுமார் (30) என்பவர் கள்ள நோட்டுகளை தயாரித்து தருவதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து திருவள்ளு வர் நகரில் உள்ள சூரியகுமாரின் வீட்டிற்கு சென்று காவல் துறையினர் சோதனை நடத்தியதில் கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கணினி மற்றும் அச்சடிக்கும் இயந்திர கருவிகளையும், தயாரித்து வைத்திருந்த இரண்டு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளையும் பறிமு தல் செய்தனர். மேலும் இவர்கள் கள்ளநோட்டுகளை ஏதேனும் புழக்கத் தில் விட்டு உள்ளனரா? என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்வு
கோவை, பிப்.25- கோவை மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்டரங் கில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்டரங்கில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி தலைமையில் மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் “இந்திய குடிமக னாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளா தார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சம மாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையையும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக் காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன். குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்து வதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். நான், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக் கிட உறுதுணையாக இருப்பேன் என்று உறுதிமொ ழியினை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் எம்.சுந் தர்ராஜன் (பணியமைப்பு), உதவி ஆணையர் (வருவாய்) என்.அண்ணாதுரை, மாநகராட்சி கல்வி அலுவலர் ஆ.வள்ளியம்மாள் மற்றும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்
அதிக விலைக்கு மதுபானம் விற்பனை- ஒருவர் கைது
உதகை,பிப்.25- நெலாக்கோட்டையில் மதுபானத்தை அரசு நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு விற்றவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி யில் மதுபானங்களை அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர்களுக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இந்த தகவலின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக நெலாக்கோட்டை பகுதி யில் தேவாலா தனிப்பிரிவு காவல்துறையி னர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் செவ்வா யன்று மதுபானங்களை வாடிக்கையாளர்க ளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வ தற்காக ஆட்டோ ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு வந்தனர். இதனை தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படையி னர் மடக்கிப்பிடித்தனர். இதில் சுமார் 27 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நெலாக்கோட்டையைச் சேர்ந்த சித்திரகனி என்பவர் தெரியவந்தது. இதன் பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.