tamilnadu

கோவை மற்றும் உதகை முக்கிய செய்திகள்

பழங்கால தங்கம் எனக்கூறி  போலி தங்கத்தை விற்ற பெண் கைது

கோவை, நவ. 27 - புதையல் மூலம் கிடைத்த பழங்கால தங்கம் எனக்கூறி போலி தங்கத்தை ஏமாற்றி விற்ற பெண் கைது  செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பெரியநாயக்கன்பாளையம் திரு வள்ளுவர் நகரில் வசிப்பவர் கணேஷ். இவரது மனைவி கவிதா. இவர் அதே பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு துணி எடுக்க கிருஷ்ணகிரி குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமி (32) என்பவர் வந்துள்ளார். அவ்வப் போது இவர் கடைக்கு வந்து துணி எடுத்துக் கொண்டு இருந்ததால் துணிக்கடைகாரர் கவிதா வுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், தான் சாலை பணியாளர் என்றும் தற்போது காரமடை பகுதியில் வசிப்பதாகவும் லட்சுமி கூறியுள்ளார். தொடர்ந்து பேசி வந்த லட் சுமி, என்னிடம் பழங்கால தங்க கட்டிகள் உள்ளதா கவும், இவற்றை தான் சாலைப்பணியில் ஈடுபடும் போது கிடைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இவற்றை விற்க முடியவில்லை என ஆதங்கப்பட்ட லட்சுமி, தெரியாதவரிடம் விற்க கொடுத்தால் ஏமாற்றி விடுவார்கள் என அஞ்சுவதாக தெரிவித் துள்ளார்.  ஒரு கட்டத்தில் கவிதாவிடம், நீங்களே இந்த பழங்கால தங்க கட்டிகளை வாங்கி கொள்ளுங்கள் என வற்புறுத்தவே கவிதாவும், தங்க கட்டிகளை வாங்கியுள்ளார். அதில் சிறு பகுதியை சோதித்த போது, அவை உண்மையான தங்கங்களாக இருந் துள்ளன. இதனால் கவிதா ரூ.2 லட்சத்திற்கு பேரம் பேசி தங்க கட்டிகளை வாங்கியுள்ளார். பிறகு தான் வாங்கிய தங்க கட்டிகளை முழுமையாக சோதித்த போது அவை போலி என தெரிய வந்துள்ளது. போலி தங்கத்தை விற்ற லட்சுமி தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் காரமடை பகுதியில் இதே போல் தங்க கட்டி இருப்பதாக ஒரு பெண்மணி கூறி விற்க முயல்வதை தனது குடும்ப நண்பர் மூலம் கிடைத்த தகவலின் பேரில் லட்சுமி பிடி பட்டார். இதையடுத்து லட்சுமியை பெரியநாயக் கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த னர். காவல்துறையினர் லட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

உதகை, நவ. 27 - அரசு மானியத்துடன் கூடிய சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் தொடர்பான விழிப்பு ணர்வு கருத்தரங்கம் வெள்ளியன்று உதகையில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது : தமிழக அரசின் அறிவுரைப்படி சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் கடன் திட்டங்கள் மற்றும் சிறு, குறு,  நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானிய திட்டத்தினை தகுதியுள்ள அனைத்து பயனாளி களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையிலான விழிப்புணர்வு கருத்தரங்கமானது வரும் வெள்ளி யன்று (நவ.29) நடைபெறுகிறது. இக்கருத்தரங்க மானது நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலு வலக கூட்டரங்கு, பிங்கர் போஸ்ட்-ல் நீலகிரி மாவட்ட தொழில் மையத்தினால் நடத்தப்பட உள்ளது. ஆகவே, தொழில் துவங்க ஆர்வமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் கீழ்  பயன் பெற மாவட்ட தொழில் மையத்தால் நடத் தப்படவுள்ள விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்த தகவல்களை அறிந்து பயன் பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு போட்டோ, கல்வித் தகுதிச்சான்று, குடும்ப அட்டை,  ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,  குடும்ப அட்டை இல்லாதவர்கள் வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், இயந்திரத்திற்கான விலைப்புள்ளி, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்கள் அசல் மற்றும் 2 நகல்களுடன் கலந்து கொள்ளலாம் என அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார்.

கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் 

கோவை, நவ. 27- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால்‌ திலகர்‌ வீதி மற்றும்‌ புவனேஸ்வரி நகர்‌ திட்டப் பகுதிகளுக்கான கிரயப்பத்திரம்‌ வழங்கும்‌ சிறப்பு முகாம்‌ வியாழனன்று ( நவ.28) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்‌, கோவை கோட்ட அலுவலகத்தில்‌ நடைபெறவுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால், அறிவிக்கப்பட்ட குடிசைப்பகு திகளை தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட் டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றி அங்கு வசித்து வந்த நபர்களுக்கே, அவர்களின் மனைகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட செயலாக்கக் குழு முடிவுகளின் அடிப்படையில்  2,368 மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரயப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.   அதனடிப்படையில் முதற்கட்டமாக கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட தெலுங்குபாளையம் கிராமம் க.ச எண்.451/1, நகர அளவை எண் 78  (பழைய சர்வே எண் 474) திலகர் வீதியில் 76 ஒதுக் கீட்டுதாரர்கள் மற்றும் புவனேஸ்வரி நகரில் 55 ஒதுக்கீடுதாரர்கள் என மொத்தம் 131 நபர்க ளின் மனைக்கு கிரயபத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நவம்பர் 28 ஆம் தேதி தமிழ்நாடு குடிசை  மாற்று வாரியம், கோவை கோட்ட அலுவலகத் தில் நடைபெற  இருக்கிறது. இதில் ஒதுக்கீட்டு தாரர்களிடமிருந்து மனுக்கள் நேரடியாக பெறப் படும். மேலும் ஒதுக்கீடுதாரர்கள் அல்லது வாரிசு தாரர்கள் தாங்கள் அளிக்கும் மனுவுடன் ஒதுக்கீடு ஆணை நகல், இருப்பிடச் சான்று, உணவு பங்கீட்டு அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு ஆகிய வற்றின் நகல்கள் இணைக்க வேண்டும். வாரிசுதா ரர்களாக இருந்தால் ஒதுக்கீடுதாரரின் இறப்பு சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் அசல் மற்றும் மனைக்கு முழுகிரயம் செலுத்திய ரசீது, கடன் பெற்றிருந்தால் கடன் தொகை செலுத்திய வாரிய ரசீது நகல்களை இணைத்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ. 27- ரயில்வே துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசை கண் டித்து ஈரோட்டில் ரயில்வே தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். மத்தியில் ஆளும் மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரு கிறது. குறிப்பாக, ரயில்வே துறை  படிப்படியாக தனியாருக்கு தாரை வார்த்து வந்த நிலையில், தற்போது  நேரடி ரயில் இயக்கத்தையும் தனியா ருக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் ரயில் கட்டணம் உட்பட அனைத் தையும் நிர்ணயம் செய்யும் உரி மையையும் தனியாருக்கே வழங்கும் அபாயம் எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசின் இந்நட வடிக்கையை கண்டித்து அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கங்க ளின் கூட்டமைப்பினர் ஈரோடு ரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் அகில இந்திய நிர்வாகி கே.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் சந்தி ரமனோகர், செயலாளர் பிரகாஷ்,  பொருளாளர் அருண், டிஆர்இயு நிர்வாகி சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ரூ.16.53 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அவிநாசி, நவ. 27- அவிநாசியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.16.53 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.  அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்  புதன்கிழமை பருத்தி ஏலம் நடை பெற்றது. இதில்   கோபி, குன்னத்தூர், சத்தி, அன்னூர், புளி யம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 957மூடை பருத்தி வந்தது. இந்த ஏலத்தில் 210 விவசாயிகளும், 10 வியாபாரி களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஏலத்தில் ஆர்.சி.எச் ரகபருத்தி குவிண்டால் ரூ .4800 முதல் ரூ 5450 வரையிலும்,  மட்டரகம்குவிண்டால் ரூ .2000 முதல் ரூ 3000 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். இதன்படி மொத்தம் ரூ. 16 லட்சத்து 53 ஆயிரத்திற்கு ஏலம்போனது.