கோவை, அக்.29– அரசு மருத்துவர்கள் கால முறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள், முதுகலை மருத் துவர்களின் மூலம் நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் மருத்துவர்க ளுக்கு இணையான காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி அக்.30,31 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக அரசு டாக்டர் கள் சங்கம் அறிவித்துள்ளது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பங் கேற்கவுள்ளனர். இதன்படி கோவையில் உள்ள 2 மருத்துவக் கல்லூரிகள், 100 ஆரம்ப சுகா தார நிலையங்கள், 12 அரசு மருத் துவமனைகளில் உள்ள 850 மருத் துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த மருத்துவர் களின் போராட்ட அறிவிப்பின் காரணமாக இரு நாட்கள் புற நோயாளிகள் பிரிவு மற்றும் சாதா ரண வார்டுகளில் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். இதனால், மருத்துவ பணிகள், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளதாக மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித் துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மருத்துவர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலை யில், 150 பயிற்சி மருத்துவர்கள், 350 முதுகலை மருத்துவர்களின் உதவியுடன் நோயாளிகளுக்கு தடையில்லாமல் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மேலும், மருத்துவக்கல்லூரி யில் உள்ள பேராசிரியர்களும் பணியில் ஈடுபட உள்ளனர். செவி லியர்கள் யாருக்கும் விடுமுறை கிடையாது என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதனால், அவர்கள் முழு மையாக பணியில் ஈடுபடுவார் கள். இதன் காரணமாக நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமம் இருக்காது. இவ் வாறு அவர் கூறினார்.
திருப்பூரில் தர்ணா
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கண்ட கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட அரசு மருத்து வர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று காலை திருப்பூர் அரசு தலைமை மருத் துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் திருப் பூர் அரசு தலைமை மருத்துவ மனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற் றனர்.