tamilnadu

img

பயிர் காப்பீடு செய்து இழப்பீடு பெறாத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்

கோவை, ஜூன் 16- 2016-18ல் பயிர் காப்பீடு செய்து மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நிதி பெறப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார். விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகக் கூட்டரங்கில்  ஆட்சியர் கு.இராசாமணி தலை மையில் நடைபெற்றது. இக்குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்ததாவது, அரசு அலுவ லர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங் கள் தொடர்பாக விவசாயிகள் அறிந்து பயன்பெறும் வகையில் தெளிவாகத் தெரிவிக்க வேள் டும்.  வேளாண்மை மற்றும் தோ டக்கலை துறைகளின் மூலம்  சொட்டுநீர் பாசன கருவிகள்  நடப்பு ஆண்டில் ரூ.44.425கோடி யில் சுமார் 9,750 ஹெக்டரில் பயன்பெறும் வகையில் செயல் படுத்தப்படவுள்ளது. இதற்கான விவசாயிகளைத் தேர்வு செய்து, பதிவு செய்யும் பணிகள் தற் பொழுது நடைபெற்று வருகின் றன. தேவைப்படும் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிருக்கு தக்க வாறு அதற்கான துறைகளை அணுகி பயன்பெறவேண்டும். பிரதம மந்திரி பயிர்க்காப் பீட்டுத் திட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மக சூல் பாதிப்பு ஏற்படும் பொழுது, பயிருக்குத் தக்கவாறும், இழப் பீட்டுக்குத் தக்கவாறும் காப்பீடு  கட்டணம் செலுத்தும் விவசாயிக ளுக்கு பயிர்காப்பீட்டுத்தொகை  வழங்கப்படும். 2016-17 ஆண் டில் பயிர்காப்பீடு செய்த 1783 விவசாயிகளில் 1538 விவசாயிக ளுக்கு ரூ.265 லட்சமும், 2017-18  ஆண்டில் பயிர் காப்பீடு செய்த  2130விவாசாயிகளில் 994 விவ சாயிகளுக்கு ரூ.88.67 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 2016-17, 2017-18-ல் மீதமுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட ரூ.107.92 லட்சம்   நிதி பெறப்பட்டுள்ளது.  இதற்குரிய விவசாயிகளின் விவர பட்டியல் பெற்று, அவர்களுக்கும் இத் தொகை விரைவில் வழங்கப்ப டும். இது தவிர 2018-19 ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயி களுக்கு மகசூல் இழப்பிற்குரிய நிவாரணம் வழங்கிட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் கரீப் பருவத்திற்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சாகுபாடி செய்யும் பயிருக்கு காப்பீட்டு கட்டணம் செலுத்தி பதிவு செய்திட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையை அணு கலாம். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 3197 ஹெக்ட ரில் மண்வரப்பு கட்டுதல், 89 பண்ணைக் குட்டை அமைத்தல், கல் வரப்பு கட்டுதல், விவசாய நிலங்களில் பலன்தரும் மரங் களை வளர்க்க 9 எக்டரிலும், 32 ஹெக்டரில் தென்னை மரங் களைச் சுற்றிக் குழி எடுத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.4086 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தட்கல் திட்டத்தில் 1203  இணைப்புகளுக்கும், விரைவு தட்கல் திட்டத்தில் 915இணைப்பு களும், ரூ.25 ஆயிரம் சுயநிதி திட் டத்தில் 581 இணைப்புகளும் ரூ.50 ஆயிரம் சுயநிதி திட்டத்தில் 116 இணைப்புகளும் வழங்கப் பட்டுள்ளது. 90 சதவிகித மானி யத்துடன்  சூரிய மின் இணைப்பு வழங்கப்படும் திட்டத்தில் 5 மின் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் வேப்பம்புண்ணாக்கு தொடர் பான உற்பத்தி நிலையம் துடிய லூர் விவசாய சேவா சங்கத்தின் மூலம் தொடங்கப்பட்டு தரமான புண்ணாக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனக் கூறி னார்.  மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அனைத்து விதமான நடவ டிக்கைகளும் மேற்கொள்ளப்ப டும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா மதுரைமுருகன், வேளாண்மை இணை இயக்குநர் பானுமதி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் வெங்க டேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் தனலிங்கம், டெய்சிகுமார், தோட்டக்கலை துணை இயக்குநர் உமாராணி, உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இக்கூ டத்தில் விவசாயிகள், விவசாய  சங்க பிரதிநிதிகளின் கோரிக்கை மனுக்களின் மீது மாவட்ட ஆட்சி யர் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்.