பொள்ளாச்சி, அக்.6- கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலையின் சுற் றுத்தளமான வால்பாறையில் இதுவரை அமலில் இல்லாத இ-பாஸ் முறை கட்டாய மாக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் சோலையாறு டேம், பாலாஜி கோவில், ஆழி யார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் அதிகம் உள்ளதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்க னவே வால்பாறை பகுதியில் உள்ள பொது மக்கள் காய்ச்சல் உள்ளிட்டவைகளால் அதி களவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித் துள்ளது. எனவே நோய் பரவாமல் தடுக்கும் விதமாக, தனிமனித இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து வரவும் குறிப்பாக, இ-பாஸ் முறை பயன்படுத்தி சுற்றுலா பய ணிகள் வர வேண்டும் என நகராட்சி நிர்வா கம் அறிவித்துள்ளது.