தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூர் கிளை 2 -இன் சிஐடியு சங்க நிர்வாகி பாஸ்கரின் மகன் தினேஷ்குமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அயனாபுரத்தில் சிஐடியு சார்பில் நடத்தப்படும் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் நன்கொடை வழங்கினார். இதில், சிஐடியு மண்டலப் பொதுச் செயலாளர் செல்லதுரை, நிர்வாகி என்.சுப்பிரமணியம் மற்றும் பிரபு உள்ளிட்டோர் அவ ரையும், அவரது குடும்பத்தாரையும் பாராட்டி நன்றி தெரி வித்தனர்.