மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிஐடியு பிரச்சாரம்
ஈரோடு, நவ. 21- தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிப்பதை கண்டித்து சிஐடியு சார்பில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. தொழிலாளர்கள் போராடி பெற்ற உரி மைகள் மற்றும் சலுகை பறிப்பை கண்டித் தும், தொழிலாளர்களுக்கு பாதகமான சட் டத்திருத்தங்களை கைவிட வேண்டும். விவ சாயத்தையும், விவசாயிகளையும் பாது காத்திட எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை களை அமல்படுத்த வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். முறைசாரா நலவாரிய பணப்பயன்களை உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் பிரச்சார இயக் கம் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக, ஈரோடு, திரு வேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி சந்திப்பில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு ஈரோடு மாவட்ட சுமை பணியாளர் சங்கத் தின் தலைவர் தங்கவேல் தலைமை வகித் தார். சுமை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அர்த்தநாரி, ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார் கள். இதில் திரளானோர் பங்கேற்றனர்.