tamilnadu

தருமபுரி முக்கிய செய்திகள்

நூறு நாள் வேலை,  ஒகேனக்கல் குடிநீர் கிடைக்குமா?

காரிமங்கலம் மலைகிராம மக்களின் எதிர்பார்ப்பு

தருமபுரி, அக். 6- காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட மலைகிராமங்களுக்கு நூறுநாள் வேலை ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்டது ஜிட்டான்ட அள்ளி, அண்ணாமலைஅள்ளி, பிக்கன அள்ளி, ஜக்கசமுத்திரம், போடர அள்ளி, குண்டாங்காடு ஆகிய மலைகிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பகுதி ஏழை  மக்கள் கூலி தொழில் செய்து வருகின்ற னர். மேலும், சிறு குறு விவசாயிகள் உள்ளனர். மலைப்பகுதி என்பதால் மானவரி பயிர்கள் விளைவிக்கப்படுகி றது. தற்போது வறட்சி நிலவுவதால் அந்த விவசாயமும் இல்லை. எனவே, இந்த  மலைப்பகுதி மக்களின் வேலைவாய்ப் புக்கும், வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருந்தது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்.  இத்திட்டத்தின் கீழ் இந்த ஊராட்சி களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணிக்கான அட்டை பெற்றுள்ளனர்.  ஆனால், கடந்த சில மாதங்களாக இவ் ஊராட்சி மக்களுக்கு நூறுநாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கப்படவில்லை. குறிப்பாக,  ஜிட்டான்ட அள்ளி ஊராட்சி மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை வழங்கவில்லை. இங்கு மாற்று வேலை வாய்ப்பும் இல்லாததால் வாழ வழியின்றி பொங்களூரு,கோயமுத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், பிக்கன அள்ளி , ஜக்கசமுத்தி ரம், ஜிட்டான்ட அள்ளி, அண்ணாமலை அள்ளி ஆகிய மலைகிராம ஊராட்சிக ளுக்கு ஒகேனக்கல் குடிநீர் வருவதில்லை. இதனால் குடிநீருக்கு மலைகிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் காந்திஜெயந்தி தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில்  மேற்கண்ட ஊராட்சிக ளுக்கு நூறுநாள் வேலை, ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என வலியு றுத்தி அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ராஜா, பொருளாளர் முருகன் ஆகியோர் கோரிக்கை மனுவினை அளித்தனர். அதன் அடிப்படையில் கிராமசபை கூட் டத்தில் நூறுநாள் வேலை வழங்கவும், குடிநீர் கிடைக்கவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஆகவே, இந்த தீர்மா னத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக் கள் வலியுறுத்துகின்றனர்.

பாலக்கோடு: அடிப்படை வசதியின்றி அரசு பள்ளி மாணவர்கள் அவதி

தருமபுரி, அக்.6- தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல் பட்டு வருகின்றது. 1955ம் ஆண்டு தொடங் கப்பட்ட பள்ளி சுமார் 70 ஆண்டுகளை கடந்து வந்துள்ளது. இப்பள்ளியில் பயின்ற பல மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர், பொறியாளர், வழக்கறிஞர் மற் றும் பல்வேறு அரசு துறை,  தனியார் துறை யிலும், வெளிநாடுகளிலும்  பணியாற்றி வருகின்றனர்.  இப்பள்ளியில் சுமார் 3,500 மாண வர்கள் பயின்ற நிலையில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவான மாணவர் களே பயின்று வருகின்றனர். பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே வருகின்றது.  இதற்கு பள்ளியின் நிர்வாக சிர்கேடு மற்றும் கழிவறை, குடிநீர், ஆய்வகம் என எந்தொரு அடிப்டைதேவையும் இன்றி இருப்பதால் மாணவர்கள் சேர்க்கை குறைந்து உள்ள தாகவும், பாலக்கோடு சுற்றியுள்ள தனி யார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் அரசு பள்ளிகளின் நிலைமை மேலும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது பெற் றோர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இப்பள்ளியில் மாண வர்கள் பயன்படுத்தும் கழிவறை முற்றி லும் சேதம் அடைந்து இடிந்த நிலையில்  உள்ளதால் மாணவர்கள் வெட்ட வெளி யில் உடல் உபாதைகளை கழிக்கும் சூழல் உள்ளது. இதனால் சுற்றுபுறத்தில் தூர்நாற்றம் வீசுவதால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கும் இப்பள்ளியானது உயர் கல்வித் துறை அமைச்சர் தொகுதியில் உள்ளடங்கியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற் கொண்டு மாணவர்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செனாக்கல் பாசன திட்டத்தை அமல்படுத்திடுக விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி, அக். 6- அரூர் பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான செனாக்கல் என் கின்ற மதிகெட்டான் கால்வாய் பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் எம். வெளாம்பட்டி, கீழ்மொரப்பூர் ஊராட்சி  எல்லையின் அருகில் செனாக்கல் என்னும்  இடத்தில் அணை கட்டுவதற்கு பிரிட்டிஷ்  ஆட்சி காலத்தில் திட்டம் துவக்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் செயல்படுத்தாமல் நீண்ட ஆண்டுகாலமாக இருந்துவந்தது. இந்நிலையில் செனாக்கல் என்கின்ற மதிக்கெட்டான் கால்வாய் பாசன திட் டத்தை அமல்படுத்துவதின் மூலம் எம். வெளாம்பட்டி, கீழ்மொரப்பூர், மருதிப் பட்டி, மத்தியம்பட்டி, மாம்பட்டி, கொங்குவேம்பு, வடுகப்பட்டி, வேட்டரப் பட்டி, பொய்யப்பட்டி, தீர்த்தமலை ஆகிய  ஊராட்சிகளில் உள்ள பல்லாயிரம் ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி பெற வாய்ப் புள்ளது. மேலும், இத்திட்டம் நிறை வேற்றும் பட்சத்தில் 30க்கு மேற்பட்ட ஏரி, குளங்களில் நீர்த்தேக்க முடியும். இதன்மூலம் நிலத்தடிநீர் மேம்படும். எனவே இப்பகுதி மக்களின் வேளாண் மையை மேம்படுத்தும் வகையில் செனக்கல் என்கின்ற மதிகெட்டான் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற தமிழக  அரசு நீதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென விவசாயிகளின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்  சேலம்-சென்னை பசுமை சாலை திட்டத்தை கைவிடுக 

தருமபுரி, அக். 6- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சேலம்-சென்னை பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என  மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 25.2.2018 அன்று, மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட் டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட் டம் 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பசுமை வழிச்சாலை 8 வழிச்சாலை யாக, சென்னை அருகேயுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரை யில், காஞ்சிபுரத்தில் 59.1 கிமீ, திருவண் ணாமலையில் 123.9 கிமீ, கிருஷ்ணகிரி யில் 2 கிமீ, தருமபுரியில் 56 கிமீ, மற் றும் சேலத்தில் 36.3 கிமீ என இம்மாவட் டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளன. இந்த பசுமை வழிப் பாதைக்கு சேலம் முதல் அரூர் வரை என்.ஹெச் 179A என்றும்,  அரூர் முதல் சென்னை வரை என்.ஹெச்  179B என்றும் எண்கள் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளன. அதேநேரம், சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு  சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழி உள் ளது. இதேபோல், சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல் பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந் தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சேலம் செல்லமுடியும். இவ்வாறு சென்னை-சேலத்திற்கு இரண்டு தேசிய  நெடுஞ்சாலைகள் இருக்கும்போது விவசா யத்தையும், மக்களின் வாழ்வாதாரத் தையும் அழிக்கும் இத்திட்டம் தேவை யில்லை என பொதுமக்கள், விவசாயிகள், அரசியல் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.என். மல்லையன் கூறுகையில், இத்திட்டத்தி னால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாழ்படும். காடுகளிலுள்ள மரங் கள் அழிக்கப்படும். இதனால் சுற்றுச்சூழ லில் பாதிப்பு ஏற்படும். மலை உள்ளிட்ட வைகளிலிருந்து கனிம வளங்கள் சுரண் டப்படும். இந்த பசுமை வழிச் சாலை அமைப்பதற்கு அதிக அளவில்  மரங்கள் வெட்டப்பட உள்ளன. மேலும் இதனால் கிணறு, ஏரி, கால்வாய்கள் அழியும்.  எனவே, விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை சீரழிக்கும் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்தார்.