tamilnadu

img

நடை மேம்பாலம் அமைக்கக்கோரி சிபிஎம் கையெழுத்து இயக்கம்

 நாமக்கல், பிப். 24- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், காவேரி ரயில்நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பள்ளிபாளையம், காவேரி ரயில் நிலையத்துக் கும் காகித ஆலைக்கும் இடையே 100 மீட்டர் அகலத் திற்கு தண்டவாளங்கள் உள்ளன. கடந்த 50 வரு டங்களாக இந்த தண்டவாளங்களை கடந்து மக்கள் சென்று வருவதால் விபத்துகள் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதன் ஆபத்தை உணர்ந்த ரயில்வே நிர்வாகம் மக்கள் சென்று வந்த பாதையின் குறுக்கே சுவர் எழுப்பி வருகின்றனர். தடுப்பு சுவர் அமைப்பதால் 100 மீட்டர் தொலைவில் உள்ள பகு தியை கடக்க காவிரி ஆற்றின் கரையில் உள்ள தரை மட்ட பாலத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத புதிய தரைமட்ட பாலத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் கடந்து செல்வது பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. மேலும், 100 மீட்டர் தொலைவில் உள்ள பகு தியை கடக்க ஒரு கிலோ மீட்டர் தொலைவை இரவு நேரத்தில் பெண்கள் கடந்து செல்வது இயலாத காரிய மாகும். ஆகவே, ரயில் தண்டவாளத்தை பாதுகாப் பாக கடந்து செல்ல நடைமேம்பாலம் அமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக் கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் கே.மோகன், ஒன்றிய செயலாளர் ஆர். ரவி, கே.குமார், ஏ.அசன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.