நாமக்கல், நவ.27- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கொக்கராயன் பேட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று குமாரபாளையம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியத்தில் உள்ள கொக்கராயன் பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும். சித்த மருத்துவப் பிரிவுக்கு கூடுதல் வசதிகள் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் நிய மித்து தேவையான மருந்துகள் வழங்க வேண்டும். அம்மாசிபாளையம் ரேசன் கடையில் 800க்கு மேற்பட்ட கார்டுகளுக்கு அரிசி, மண்ணெண்ணெய், கோதுமை உள்ளிட்ட 14 அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக வழங்க வேண்டும். அம்மாசிபாளையம் அரசு பள்ளி அருகில் உள்ள கிணற்றுக்கு கம்பி மூடு வலை அமைத்து எவ்வித விபத்தும் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், சாக்கடை வசதிகள் ஏற் படுத்தித் தரவேண்டும். தேர்தல் காலத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ள ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு சுமார் 2 கி.மீ., தூரம் சென்று வாக்களிப்பதை மாற்றி இப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என கோரிக்கை மனுவை குமாரபாளையம் வட்டாட்சி யரிடம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ.சம்பூரணம் தலை மையில் அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.