உடுமலை, ஆக. 30- மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி பொள்ளாச்சி நாடா ளுமன்ற உறுப்பினரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. உடுமலை வட்டம் குருமலை, மேல்குருமலை, குழிபட்டி, மாவடாப்பு, திருமூர்த்தி மலை , ஈசல்திட்டு ஆகிய பகுதிக ளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு பொள்ளாச்சி நாடாளுமன்ற கு.சண்முகசுந்தரம் வெள்ளியன்று வருகை தந்தார். அப்போது, மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப் பட்டது. முன்னதாக இந்த நிகழ்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சி.சுப்பிரமணியம், எஸ்.ஆர்.மதுசூதனண், மலை வாழ் மக்கள் கமிட்டியின் செயலாளர் செல்வம், கமிட்டி உறுப்பினர் மணி மற்றும் திரளானோர் கலந்து கொண்டார்கள்.