tamilnadu

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை, அக். 4-  கோவை மாநகராட்சி யில் திடக்கழிவு மேலாண் மைத் திட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணி கள் குறித்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மாநக ராட்சி ஆணையாளர் மற் றும் தனி அலுவலர் பெ.குமா ரவேல் பாண்டியன் ஞாயி றன்று ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி யில் உள்ள அனைத்து மண் டலங்களில் இருந்து சேகரிக் கப்படும் குப்பைகள், வெள் ளலூர் குப்பைக்கிடங்கில் உள்ள தரம் பிரிக்கும் மையத் திற்கு கொண்டு செல்லப் பட்டு இயந்திரங்கள் மூல மாக மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. இவ் வாறு இயந்திரங்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கப்படும் பணி கள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பெ.குமார வேல் பாண்டியன், மக்கும் குப்பைகள், மக்காத குப்பை கள் தரம் பிரிக்கும் பணி களை துரித படுத்திட வேண் டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.  இந்த ஆய்வின்போது மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி பொறியாளர்கள் ரவிக்கண் ணன், ஹேமதலா உள் ளிட்ட அரசுத்துறை அலுவ லர்கள் பலர் கலந்து கொண் டனர்.