பொள்ளாச்சி, ஜுன் 4-செட்டிபாளையம் ஊராட்சி அரசு தொடக்க பள்ளியில் இருந்த வேப்பமரத்தை வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் வளாகத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வேப்பமரம் ஒன்றுமுன்னாள் மாணவர்களால் நடப்பட்டது. நன்கு கிளைபரப்பி வளர்ந்துள்ள நிலையில், தற்போது அந்த வேப்பமரத்தை அதிமுக பிரமுகர்கள் சிலர் வெட்டியுள்ளனர்.அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்தி பொள்ளாச்சி வட்டாட்சியருக்கு சமூகஆர்வலர் சுரேஷ் (எ) முருகானந்தம் என்பவர் தகவல் தெரிவித்துள்ளார் .இதனையடுத்து ஞாயிறன்று சம்பவ இடத்திற்கு நேரில்வந்து விவரம் கேட்டறிந்த வட்டாட்சியர் ராஜரத்தினம் மரம் வெட்டும் பணியை நிறுத்த உத்திரவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஆளுங்கட்சி பிரமுகர்கள் அமைச்சரின் பெயரைக்கூறி அவரை திருப்பியனுப்பியதாக தெரிகிறது. மேலும், இதனைத் தொடர்ந்து புகாரளித்த சமூகஆர்வலர் சுரேஷ் (எ) முருகானந்தத்தை அப்பகுதியைச்சார்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் மிரட்டி வருவதாககூறி திங்களன்று பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் புகார் மனு அளித்தார்.