திருப்பூர், ஜூலை 31 – திருப்பூரில் கிறிஸ்துவ சமுதா யத்தைச் சேர்ந்தவரின் வீட்டிற்குள் புகுந்து ஏழு பேர் கொண்ட இந்து முன்னணி கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டது. இது தொடர்பாக புகார் கொடுத்து மூன்று நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் வேலம் பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருப்பூர் சாமுண்டிபுரம் அருகே எம்ஜிஆர் நகர், அமர்ஜோதி குடியி ருப்பில் வசித்து வருபவர் அமுதா என்கிற எஸ்தர். இவரது மருமகள் ஏழு மாத கர்ப்பிணியாக இருக் கிறார். கடந்த சில நாட்களாக இவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில் ஜீவ வார்த்தை திருச் சபையின் போதகர் விக்டரிடம் வீட்டிற்கு வந்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டிருக்கிறார். அதன்படி ஞாயிறன்று மாலை போதகர் விக்டரும் மேலும் இரு வரும் எஸ்தர் வீட்டிற்கு வந்துள் ளனர். அப்போது இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த செல்வம் மற்றும் ஒரு பெண் உட்பட ஏழு பேர் கும்பல் அத்துமீறி எஸ்தர் வீட்டுக் குள் புகுந்து அங்கிருந்தவர்களைத் தரக்குறைவாக பேசியதுடன், வீட் டிற்குள் வீடியோ எடுத்துள்ளனர். வீட்டுக்குள் பிரார்த்தனை செய்யக் கூடாது என்று மிரட்டி போதக ரையும், உடன்வந்தவர்களையும் வீட்டுக்கு வெளியே இழுத்துப் போட்டு இனி வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி யுள்ளனர். அத்துடன் மேற்படி எஸ்தரின் வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளரிடமும் சென்று இவர் களை இங்கிருந்து காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வீட்டைத் தகர்த்துவிடுவோம் என மிரட்டிச் சென்றுள்ளனர். இதை யடுத்து பயந்துபோன வீட்டு உரிமையாளரும், எஸ்தர் குடும்பத் தாரை உடனடியாக வீட்டைக் காலி செய்யுமாறு வற்புறுத்தி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட எஸ்தர் 15 வேலம் பாளையம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகார் கொடுத்திருக்கிறார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் நிலைத் தார் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் எஸ்தர் மற்றும் அவரது கிறிஸ்துவ சபையைச் சேர்ந்தவர்கள் சுமார் 30 பேர் புதன் கிழமை வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு வந்தனர். இதற்கிடையே இந்து முன்னணி யைச் சேர்ந்த பகுதி பொறுப்பாளர் வெங்கடேசன் என்பவர் தலைமை யில் சிலர் காவல் நிலையத்துக்கு வந் தனர். இரு தரப்பினர் காவல் நிலை யத்திற்கு வந்த நிலையில் பதற்ற மான சூழ்நிலை ஏற்பட்டது. காவல் துறையினர் இருதரப்பினரையும் கலைந்து போகும்படி விரட்டினர். வீடு புகுந்து தாக்கியது தொடர் பாக செல்வம் என்பவனைப் பிடித்து வந்திருந்தனர். அத்துடன் இந்த சம்ப வத்தில் வழக்குப் பதிவு செய்து குற்ற வாளிகளை கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கிறிஸ்துவ சபையைச் சேர்ந்த நிர் வாகி லாசர் என்பவர் கூறுகையில், இதேபோல் கடந்த ஜூன் 9ஆம் தேதி திலகர் நகர் முதல் வீதியில் கிறிஸ்துவ பிரார்த்தனை மையத் திற்குள் இந்து முன்னணியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மற்றும் சிலருடன் செருப்பு காலுடன் நுழைந்து மிரட்டல் விடுத்ததாகவும், இது குறித்து வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் ஒன்றரை மாதத் திற்கு மேலாக நடவடிக்கை எடுக் கப்படவில்லை. எனவே இரு சம்பவங்களிலும் குற்றவாளி களைக் கைது செய்வதுடன், எங்களுக்கு சட்டப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறி னார்.