ஈரோடு, ஜூன் 10- நிதி முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க தலைவர் மீது நட வடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து சென்னிமலை அருகே ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அலுவலகத்தை நெச வாளர்கள் முற்றுகையிட்டனர். ஈரோடு மாவட்டம், சென்னி மலை அருகே பள்ளக்காட்டு புதூரில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்க ளாக உள்ளர். இவர்களில் 700க்கும் மேற்பட்ட நெசவாளர் கள் போர்வை உற்பத்தியில் ஈடு பட்டு வருகின்றனர். இந்த சங்கத் தின் தலைவராக சென்னிமலை அதிமுக ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், உப தலை வராக கோவிந்தராஜ் உள்ளிட் டோர் நிர்வாகிகளாக உள்ளனர். இந்நிலையில் தலைவர், உப தலைவர் மற்றும் இயக்குனர்களி டையே வரவு, செலவில் நடை பெற்ற முறைகேடுகள் தொடர் பாக பிரச்சனை எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து தலைவர் கோபாலகிருஷ்ணன் மீது உப தலைவர் மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்டோர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் கடி தத்தை கடந்த மே 31 ம் தேதி கைத் தறி துணி நூல் உதவி இயக்குன ரிடம் கொடுத்தனர்.
இதனடிப்படையில், ஜூன் 7 ம் தேதி தேர்தல் நடத்தும் அலு வலரான கைத்தறி துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர் சக்தி வேல், பள்ளக்காட்டு புதூர் சங்கத் திற்கு வந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கடி தத்தை இயக்குனர்களிடம் பெற் றார். இதில் உபதலைவர் கோவிந் தசாமி மற்றும் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட் டனர். ஆனால், தீர்மான நகல், தலைவர் பதவியிழந்த நோட்டீஸ் ஆகியவை இதுவரை வெளியிடப் படாமல் உள்ளது. இந்நிலையில், பதவியிழப்புக் கான நோட்டீசை உடனடியாக வெளியிடக்கோரி நெசவாளர் சங்கத்தைச் சேர்ந்த இயக்குனர் கள் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்க ளன்று ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, நெசவாளர்கள் கூறுகையில், தீபாவளியின் போது போனஸ் வழங்கியதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தலைவர் மீது நம்பிக்கை இல்லாதத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு, உப தலைவர் உள்பட 5 பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், இதுவரை உரிய நடவ டிக்கை எடுக்கவில்லை. குறிப் பாக, செக் பவர் (சங்கத்தின் காசோலை வழங்குதல்) தலைவ ருக்கு உள்ளதால், நெசவாளர்க ளுக்கு பணம் வழங்குவது மற்றும் வரவு, செலவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, நம் பிக்கை இல்லாத தீர்மானம் அடிப்படையில் பதவியிழப்பு நோட்டீஸ் உடனடியாக ஒட்ட வேண்டும் என்றனர்.
இதுகுறித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்கு னர் ஸ்ரீதர் கூறுகையில், நம் பிக்கை இல்லாத தீர்மானம் கடிதம் கொடுத்தாலும், அது முறையான கூட்டம் போட்டு கொடுக்கப்பட் டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சட்ட ரீதியான சில சிக்கல் உள்ளதால், அவரைப் பார்த்த பிறகே பதவியிழப்பு நோட் டீஸ் வினியோகம் செய்ய முடியும். அதேநேரம், நெசவாளர்களுக்கு பாதிப்பு வராத வகையில் மாற்று நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.