சென்னை, செப். 20- பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்ல புரத்தில் விரைவில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற வுள்ளனர். இந் நிலையில் அங்கு, சீன பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியும், சீன அதி பர் ஜின்பிங்கும் அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மாமல்லபுரம் மற்றும் கோவளம் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன பாது காப்புத்துறை, உள்துறை, வெளி யுறவுத் துறை, சுற்றுலாத்துறை களைச் சேர்ந்த 30க்கும் மேற் பட்ட அதிகாரிகள் மாமல்லபுரம் வந்துள்ளனர். இரு தலைவர்க ளும் தங்கவுள்ள தாஜ் நட்சத்திர விடுதி, சுற்றிப் பார்க்க இருக்கும் அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரைக் கோயில் உள்ளிட்ட இடங்களில் அந்த குழுவினர் ஆய்வு செய்த னர்.
இதனிடையே மாமல்லபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் வரு வாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் வீடுவீடாக சோதனைகள் மேற்கொண்டுள்ள னர். அப்போது, வெண்புருஷம் என்ற மீனவ கிராமத்தில் நாக முத்து என்பவர் வீட்டில் தங்கி யிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவ ணங்களும் இல்லாமல் இருந்த தையடுத்து ஒருவரை கைது செய்துள்ளனர். இதேபோன்று கேளம் பாக்கத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த இலங்கை கிளிநொச்சியைச் சேர்ந்த ராஜ நாயகம் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ள னர். இவர் 2009-ஆம் ஆண்டே இந்தியா வந்ததாகவும் சென்னை அருகே பல்வேறு இடங்களில் தங்கியிருந்த நிலையில் வர்தா புயலின் போது பாஸ்போர்ட் தொலைந்ததாகவும், கூறப்படும் நிலையில் அதற்கான ஆதாரங் கள் ஏதும் இல்லாததால் அவரை கைது செய்து காவல்துறையி னர் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.