tamilnadu

img

மடியில் கனமில்லாதவன் யாருக்கு அஞ்ச வேண்டும்? எந்த விசாரணைக்கும் தயார்: கே.டி.ஜலீல்

கொச்சி, ஆக.23- மத்திய நிதி அமைச்சகம் தனக்கு எதிராக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது என்ற செய்திகளுக்கு கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கே.டி.ஜலீல் பதிலளித்துள்ளார். எந்தவொரு விசாரணைக்கும் ஆயிரம் முறை தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே இதை தெளிவுபடுத்தியதாகவும் ஜலீல் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது முகநூல் பதிவு: யுஏஇ தூதரகம் விநியோகம் செய்த ரம்ஜான் பைகள் விநியோகத்துடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மத்திய நிதி அமைச்சகம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக காட்சி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை பார்த்தேன். எந்த விசாரணையையும் ஆயிரம் முறை எதிர்கொள்ளத் தயார். இதை ஏற்கனவே நான் தெளிவுபடுத்தியுள்ளேன். எந்த விசாரணை முகமை வேண்டுமென்றாலும் விசாரிக்கலாம். மடியில் கனமில்லாதவன் யாருக்காக அஞ்ச வேண்டும்? எனது கன்மேன், ஓட்டுநர் ஆகியோருடன் நானும் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு இன்று கோவிட் சோதனை செய்தோம். எனக்கும் ஓட்டுநருக்கும் எதிர்மறை. கன்மேனின் முடிவு நேர்மறையானது. அவர் விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார். நான் உள்ளிட்டவர்கள் தனிமை கண்காணிப்பில் செல்லுமாறு திருவனந்தபுரம் டி.எம்.ஓ கூறியுள்ளார். யார் வேண்டுமானாலும் எப்போதும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.