tamilnadu

img

கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது குண்டு வீசிய ஆர்ஸ்எஸ்எஸ் ஊழியர்..

கேரளா மாநிலம்  கண்ணூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய ஆர்எஸ்எஸ் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
கேரளமாநிலம் கண்ணூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவகம் மீது கலவரத்தை 
ஏற்படுத்தும் நோக்குடன் கடந்த ஜனவரி 16ம் தேதி குண்டு வீசப்பட்டது. இச்சம்பவம் குறித்து சிசிடிவி ஆதாரங்களை வைத்து  காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றவாளி கோவைக்கு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து செவ்வாயன்று குற்றம் சாட்டப்பட்ட பிரபேஷ் கோவையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பிரபேஷ் ஆர்எஸ் எஸ் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் சிபிஎம் தரப்பினர் வெடிகுண்டை வீசியதாக கூறி கலவரம் ஏற்படுத்த போடப்பட்ட திட்டம் என்பது தெரியவந்திருக்கிறது. பிரபேஷ்  மீது ஏற்கனவே வெடிபொருள்கள் தடுப்பு சட்டம் 1883 உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது-

;